பாரிஸ், பிப்.17- மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி யில் இருந்து வெளியேறும் முடிவை விரைவில் பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலியின் வட பகுதியில் மதத் தீவிர வாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வந்ததால், அவர்களை அடக்கப் போகி றோம் என்று சொல்லிக் கொண்டு பிரான் சின் படைகள் மாலிக்குள் புகுந்தன. 2013 ஆம் ஆண்டில் மாலியின் பல பகுதிகளில் பிரான்ஸ் படைகள் நிறுத் தப்பட்டன. துவக்க கட்டத்தில் பிரான்ஸ் படையின் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. ஆனால், 2015 ஆம் ஆண்டில் தீவிரவாதக்குழுக்கள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு மத்திய மாலியில் நுழைந்தன. அதே வேளை யில் எல்லையில் அமைந்துள்ள நைஜர் மற்றும் பர்கினோ பசோ ஆகிய நாடுகள் மீதும் தாக்குதலை நடத்தின. 2020 ஆம் ஆண்டில் இரண்டு கல கங்கள் நடந்துள்ளன. இந்தக் கல கங்களை அடக்க பிரான்ஸ் எந்த முயற்சி யும் எடுக்கவில்லை. பிரான்ஸ் படை களில் இருப்புக்கு எதிராக மக்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஆப்பிரிக்க யூனியன்-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாடு பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்சில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டு முடிவிலோ அல்லது விரைவி லோ படை விலக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மாலியில் பிரான்ஸ் படைகள் இருப்பது குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச் ்சர் ஜீன் ஒய்வ்ஸ் லீ டிரியன், “மாலியில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற சூழல் எங்களுக்கு இருந்தால் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. தற்போது அப்படிப்பட்ட சூழல்தான் நிலவுகிறது” என்றார். அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதையே பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தேர்தல்
ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் வரவுள்ள நிலையில், ஆப்கா னிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளி யேறிய நிலையையும், தற்போது பிரான்ஸ் படைகள் மாலியிலிருந்து வெளியேறுவதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து விடக்கூடாது என்று மக்ரோன் நினைக்கிறார். பாரிசில் பல்வேறு ஆப்பிரிக்கத் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். விரைவில் மாலியில் இருந்து படைகள் விலக்கம் என்று அவர் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.