புதுக்கோட்டை, ஜூலை 15 - மதச்சார்பின்மையை பாதுகாக்க மாணவர்கள் ஒன்றிணைந்து முன்வர வேண்டும் என்றார் கேரள மாநில முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா. புதுக்கோட்டை கைக்குறிச்சியி லுள்ள ஸ்ரீபாரதி கலை மற்றும் அறி வியல் மகளிர் கல்லூரியில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ‘பெண்களின் அதிகாரமும், சமூக முன்னேற்றமும்’ என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: உயர் கல்வி படிக்கும் பெண்கள் அரசியலில் இறங்கவில்லை என்றா லும், அரசியலைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். மதம் எது வேண்டுமானாலும் இருக்கலாம், வெவ்வேறு கட்சிக் கொள்கை சார்ந்த வராகக் கூட இருக்கலாம். ஆனால் மனித நேயத்தை மாணவ சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டும். மதச்சார்பின் மையை பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும். அரசியல் அமைப்பை பாதுகாக்க வேண்டும். பாரதியும், பெரியாரும் வழி காட்டிய இந்த மண்ணில், பெண்கள் எப்போதும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். இங்கு படிக்கக்கூடிய நீங்கள் நாளைய சமூகத்தை உரு வாக்குபவர்களாக மாற வேண்டும். மனித சமூகத்தில் மகளிருக்கு தனிப் பட்ட அடையாளம் கிடைக்க வேண்டு மென்றால், அது கல்வியால் மட்டும்தான் முடியும். அதன்மூலம் எதிர்காலத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் வல்லுநர்களாக மாற முடியும். ஆகவே, எந்தச் சூழ்நிலையிலும் கல்வியை நிறுத்தி விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்குக்கு கல்விக் குழுமத் தலைவர் குரு.தனசேகரன் தலைமை வகித்தார். இயக்குநர் மா.குமுதா, முதல்வர் செ.கவிதா ஆகியோர் முன் னிலை வகித்தனர். முன்னதாக மாணவி ஜெ.ஹெச்.சிவாந்து வரவேற்றார். தனுஷ்யா குருசாமி நன்றி கூறினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.