நாகர்கோவில், ஜூலை 5- கன்னியாகுமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள் ளது. இதனால் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள 42 கிராம மீனவர் கள் கடந்த 3 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடல் சீற்றத்தின் காரணமாக அவ்வப்போது கடல் நீர் ஊருக்குள் புகுந்தும் வரு கிறது. இன்று 4 - வது நாளாக கடற்கரை யையொட்டி உள்ள கிராமங்களில் வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து செல்வதால் பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்துடன் உள்ளனர். குறிப்பாக தேங்கா பட்டணம் பகுதி இரயுமன்துறை, தூத்தூர், வள்ள விளை, பூத்துறை, கடியப்பட்டிணம், ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ராட்சத அலை கள் 15 அடி முதல் 20 அடி உயரத் திற்கு எழும்பியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குளச்சல் பகுதியிலும் செவ்வா யன்று கடல் சீற்றம் அதிகமாக இருந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கட்டு மரங்கள், வள்ளங்கள், பைபர் படகுகள் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மாவட்டத் தின் மீன்பிடி துறைமுகங்கள் வெறிச் சோடி காணப்பட்டது.