நாட்டுப்புற பாடகர் ’கலைமாமணி’ கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
சிவகங்கை, ஜூன் 14 - நாட்டுப் புற பாடக ரும், திரைக் கலைஞரு மான கொல் லங்குடி கருப்பாயி உடல் நலக்குறைவால் சனிக் கிழமையன்று (ஜூன் 14) கால மானார். அவருக்கு வயது 99. சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்த வர் கருப்பாயி (99), தமிழ் நாட்டுப்புற இசையின் முன் னோடிகளில் ஒருவர் ஆவார். 1985-ஆம் ஆண்டு, பாண்டிய ராஜன் இயக்கி நடித்த ‘ஆண் பாவம்’ திரைப்படத் தில் அவருக்கு பாட்டியாக நடித்த அவர், தொடர்ந்து ‘ஆயுசு நூறு’, ‘கோபாலா கோபாலா’, ’கபடி கபடி’ போன்ற படங்களிலும் நடித்தார். பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ள கொல்லங்குடி கருப்பாயி, 1993-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கி கௌர விக்கப்பட்டார். அகில இந் திய வானொலியிலும் கொல் லங்குடி கருப்பாயி பணி புரிந்துள்ளார். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக கொல் லங்குடி கருப்பாயி சனிக்கிழ மையன்று (ஜூன் 14) காலமா னார். பொதுமக்கள் அஞ்ச லிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள் ளது. இறுதி நிகழ்ச்சிகள் ஞாயிறன்று (ஜூன் 15) நடை பெறுகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள் ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு: நாட்டுப்புற இசைக் கலைஞரும், கலைமாமணி விருதுபெற்றவருமான கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியைச் சேர்ந்த கருப்பாயி அம்மாள், இயல்பிலேயே நாட்டுப்புறப் பாடல் களை பாடும் திறன் பெற்றிருந்தார். முகவை கலைக்குழு வில் அங்கம் வகித்த அவர், தமிழ்நாடு மற்றும் கேர ளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடியுள்ளார். மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் மாநாட்டிலும் பாடியுள்ளார். சில திரைப்படங்களிலும் பாடி நடித்துள்ளார். அவர், கட்சி உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவரது மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், உற வினர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.