எட்டையபுரம் 3வது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, வெள்ளநீரை அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூகநலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், வருவாய் நிர்வாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.லட்சுமிபதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.