- தல என்று என்னை அழைக்காதீர்கள் என நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் சேவையானது டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள் புதன்கிழமை காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன் காலை 10 மணிக்கு 120 அடியாக இருந் தது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,500 கன அடியிலிருந்து 9,500 கன அடியாக சரிந்தது.
- கொரோனா தடுப்பூசி செலுத்தாத வர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி உத்தர விட்டுள்ளார்.
- சாத்தூரில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சார்பில் மாவட்ட வரு வாய் அலுவலரிடம் மனு அளிக்கப் பட்டது.
- தேசிய குற்றப் பதிவுத் துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில் 2020-ஆண்டு அதிகம் தற்கொலை நடந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த பாலியல் தொல்லை புகார் ஆதாரமற்றது என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
- நடிகர் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குண மடைந்துவிட்டதாக மருத்தவமனை தகவல் தெரிவித்துள்ளது.
- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உப்பாற்றில் உடைந்த கரைகள் மணல் மூட்டைகளை வைத்து அடுக்கி சீரமைக்கப்பட்டது. இதனால் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீர் நிறுத்தப்பட்டது.
- ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகம்-கேரளம் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
- திமுக வாக்குறுதிகளை நிறை வேற்றாவிட்டால் போராட்டம், திமுக அரசுக்குக் கண்டனம் என அதிமுக செயற்குழுவில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமத்தில் செவ் வாய்கிழமை யானைக் கூட்டம் முகா மிட்டு குடியிருப்புக்களில் உலாவுவ தால் மலைக் கிராமத்தினர் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
- அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என அக்கட்சியின் விதியில் மாற்றம் செய்யப்பட்டு செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.