கடலூர், மே 11 - நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டா வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் முதல் யூனிட் பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெரும் புகை சூழ்ந்தது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான்கு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரிந்த இந்த தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. ஆனாலும், மின்சாரம் செல்வதில் எந்த தடங்கலும் இல்லாமல் இரண்டாவது யூனிட்டில் இருந்து மின்சாரம் அனுப்பப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து என்எல்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.