கொடைக்கானல், மே 30- கொடைக்கானலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் திங்களன்று துவங்கியது. இந்த பயிற்சி முகாமையொட்டி கட்சியின் மாநி லச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: அகில இந்திய அளவிலான வேலை யில்லாத்திண்டாட்டம், விலைவாசி உயர்வு களுக்கு காரணமான மோடி அரசாங்கத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் இயக்கம் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் இடதுசாரிக்கட்சி களான சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்) விடுதலை மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பாக ஒரு வலுவான இயக்கத்தை நடத்தி யிருக்கிறோம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு தான் பிற பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்கிற பொழுது ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை மீதான செஸ் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திரும்ப பெற வேண்டும். மோடி அரசு இப்படிப்பட்ட மோசமான பொருளாதாரக்கொள்கையை கடைபிடித்து விட்டு தனக்கு தமிழ்நாட்டிலிருந்து தஞ்சை மக ளிர் சுயஉதவிக்குழுவினர் தலையாட்டி பொம்மையை அனுப்பியிருப்பதாக தெரி வித்துள்ளார். மக்கள் எல்லோரையும் தலை யாட்டி பொம்மையாக இருக்க வேண்டும்; எதிர்த்து பேசக்கூடாது என்று மோடி விரும்பு வதை பகடி செய்யும் பொருட்டே மகளிர் சுய உதவிக்குழுவினர் அந்த பரிசை அனுப்பி னார்கள் போலிருக்கிறது. எனவே அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் அண்ணாமலை பேச்சுகள் எல்லாம் மக்கள் மத்தியில் ஒரு அருவருப்பை ஏற் படுத்தியிருக்கிறது. அவரது சொந்த கட்சிக் குள்ளேயே ஒரு கொந்தளிப்பு உருவாகியிருக்கி றது என்று தெரிகிறது. இதற்கு முன் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்படி யெல்லாம் கிடையாது.
பிரதமர் கலந்துகொண்டிருக்கிற கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டுப் பிரச்ச னைகளை பேசினார். அதனால் தமிழ்நாட்டு மக்க ளுக்கு ஏதோ அவமானம் ஏற்பட்டுவிட்டது என்பது போலப் பிதற்றுகிறார். அண்ணாமலை.
கொடைக்கானல் மக்களின் நிலை
கொடைக்கானலில் விவசாயிகளுக்கு நிலப்பட்டா வழங்க இயலாத நிலை உள்ளது. வசதிபடைத்தவர்கள் ஏராளமான ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்து உள்ளார்கள். பாரம்பரியமாக இங்கேயே வாழ்கிற மக்கள் 19 சென்ட் நிலத்தை கூட இழந்து வாழ்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த சீசன் நேரத்தில் மக்களுக்கு சுற்றுலா பயணிகள்மூலம் ஏதோ சிறிய வருமானம் 3 மாதங்களுக்கு கிடைக்கி றது. ஆனால் மீதமுள்ள 9 மாதங்களும் வரு மானமின்றி தவிக்கிற நிலை உள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் ஊட்டிக்குச்சென்று மலைவாழ் மக்களைசந்தித்து பேசினார். அங்கு நீண்ட கால பிரச்சனையாக உள்ள செக்சன் 17 பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பேன் என்று உறுதி கூறியுள்ளார். அதே போல் முதல மைச்சர் கொடைக்கானல் மலைக்கும் வர வேண்டும். இந்த மக்களின் அடிப்படை பிரச்ச னைகளை தீர்க்க முன்வரவேண்டும். குறிப்பாக கொடைக்கானலிலிருந்து மூணாறுக்கு இடையே யுள்ள 3 கி.மீ சாலையை அமைத்துக்கொடுக்க வேண்டும்.
கேரளா, தமிழ்நாடு ஆகிய 2 மாநி லங்கள் துண்டிக்கப்பட்டது போல உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் விவசாயி களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமான மும், வியாபாரமும் கிடைக்கும். இது அரசால் முடி யாத காரியம் இல்லை. இந்த பகுதி மக்களின் பட்டா பிரச்சனை எப்படியோ, அதேபோல் இங்கு வசிக்கும் புலை யர் சமூக மக்களை பழங்குடியின பட்டிய லுக்கு மாற்றி சான்றிதழ் வழங்க அரசு முன்வர வேண்டும். அதே போல கிறிஸ்தவர்களாக மாறியி ருக்கிற எஸ்.டி. மக்களுக்கும், எஸ்.சி. மக்க ளுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.