tamilnadu

img

ரோந்து பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி

 சென்னை, ஆக. 27- திருச்சிராப்பள்ளி மாவட் டத்தில் ரோந்து பணியின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த தலை மைக் காவலர் குடும்பத் திற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோ லையை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 27) நேரில் வழங்கி னார். திருச்சி மாநகர் அரிய மங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (45) கடந்த மாதம் 30ஆம் தேதி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடு பட்டிருந்தபோது அந்த வழி யாக வந்த கார் ஒன்று மோதி யதில் காயமுற்று அருகி லுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் சனிக்கிழமை அவரது மறை வுக்கு இரங்கல் தெரிவித்து, தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் “கள ஆய்வில் முதல்வர்” திட்டத் தின் கீழ், ஆய்வுப் பணிகளை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பும் வழியில்  ஞாயிற்றுக்கிழமை (ஆக 27) திருச்சி விமான நிலை யத்தில், ரூ. 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை மறைந்த தலைமைக் காவலர் ஸ்ரீதர் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது, திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார், மாநகர காவல்துறை ஆணையர் என்.காமினி ஆகியோர் உடனிருந்தனர்.