tamilnadu

img

எஸ்பிஐ தேர்வு விவகாரம் முதலமைச்சருடன் நிதியமைச்சர் பேச்சு

சென்னை, ஜன. 14 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, பாரத ஸ்டேட் வங்கியில் மக்களவை உறுப்பினர்கள் நடத்திய காத்திருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பாரத் ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) கிளார்க் பணி யிடங்களுக்கு முதன்மைத் தேர்வை பொங்கல் அன்று நடத்த உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து ஜன.13 அன்று, வங்கியின் சென்னை வட்டாரத் தலை மையகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் முற்றுகை யிட்டனர். இதனைத் தொடர்ந்து கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பி னர் சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஃபெபி மாநிலச் செயலாளர் ரவி க்குமார் ஆகியோருடன் வட்டார தலைமை பொது மேலாளர் ரா.ராதாகிருஷ்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். தேதியை மாற்ற நிர்வாகம் ஒப்புக் கொள்ளாததால், வங்கிக்குள் ளேயே காத்திருப்பு போராட் டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் மக்களவை உறுப்பினர்கள் தொல்.திருமா வளவன் (விசிக), தமிழச்சி தங்க பாண்டியன் (திமுக), ஏ.செல்லக் குமார் (காங்கிரஸ்) ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தை ஆதரித்து வங்கிக்கு முன்பாக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தச்சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று இரவு 11 மணி அளவில் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன், “முதலமைச்சரு டன் ஒன்றிய நிதியமைச்சர் பேசி யுள்ளார். அப்போது தேர்வு தேதியை ஒத்தி வைக்க முதல மைச்சர் கடுமையாக வலியுறுத்தி உள்ளார். அதனைத்தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அதிகாரி களுடன் கலந்து பேசி, தகவல் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைத்துள் ளோம்” என்றார்.