tamilnadu

img

களப்பணி வழிகாட்டுதல் பயிற்சி

களப்பணி  வழிகாட்டுதல் பயிற்சி

டம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி திங்கள்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தொடங்கி வைத்து முன்களப் பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  பின்னர் அவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் எளிதாக அணுகி அரசு உதவிகள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. எளிதாக உதவிகள் பெறுவதற்காக உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் 19 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சேவைகளை வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 160 முன்களப் பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுத்தல், மறுவாழ்வு உதவிகள் பெறுவதற்கு மதிப்பீடு செய்தல், பிறத்துறை மூலமாக வழங்கப்படும் உதவிகளை பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல், மறுவாழ்வு உதவிகள் கிடைத்திட பரிந்துரை செய்தல் போன்ற உன்னதமான பணிகளை முன்களப் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். உலகநாதன், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் கே.நிர்மலா, வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.