tamilnadu

img

தஞ்சாவூர் அருகே கிராமங்களில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்

தஞ்சாவூர், ஜூலை 10 -  தஞ்சாவூர் அருகே விளைநிலங் களில் புகுந்து, நெல் உள்ளிட்ட விளைப் பொருட்களை சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியை விவசாயிகள் பிடித்து  வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தஞ்சாவூர் அருகே தென்னங்குடி,  வெள்ளாம்பெரம்பூர், கள்ளப்பெரம் பூர், வரகூர், திருக்காட்டுப்பள்ளி, கடம்பங் குடி, நடுக்காவேரி, அம்மையகரம், அள்ளூர், அல்சகுடி போன்ற கிராமங் களில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றி கள் கூட்டம் கூட்டமாக, நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் புகுந்து விளைப் பொருட்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்த காட்டுப்பன்றிகளை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரி களுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் செவ்வாய்க்கிழ மை காலை வெள்ளாம்பெரம்பூர் கிரா மத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தியது. விவசாயிகள் காட்டுப்பன்றிகளை விரட்டினர். இதில் 10 கிலோ எடையுள்ள காட்டுப்பன்றி குட்டி ஒன்று சேற்றில் சிக்கிகொண்டது.  விவசாயிகள் அந்த காட்டுப்பன்றி யை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் காட்டுப் பன்றியை பச்சமலை வனச்சரகத்தில் கொண்டு விட கூண்டியில் காட்டுப் பன்றியை கொண்டு சென்றனர். இதுகுறித்து வெள்ளாம்பெரம்பூ ரைச் சேர்ந்த விவசாயி துரை.ரமேஷ் என்பவர் கூறுகையில், எங்களது பகுதி யில் வெண்ணாறு, வெட்டாறு காவிரி ஆறுகளின் படுகை பகுதிகளில் காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளது. இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து நெல், கரும்பு மற்றும் தோட்டப் பயிர்களை சேதப்படுத்தி வந்தது. நாங்கள் பல முறை வனத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் கொடுத்தோம். ஆனால் காட்டுப்பன்றி களை பிடிக்க முடியவில்லை. விளை நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.