tamilnadu

img

அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகள் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம் பார்வையிட்டார்

 திருப்பூர், ஏப்.13- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்மு கம் அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகளை வியாழனன்று பார்வையிட்டார். பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் நீரேற்று நிலை யத்தில் சிறப்பு திட்ட உதவிப் பொறியாளர் பூர்ணிமா திட்டப்ப ணிகளை விளக்கி கூறினார். நீரேற்று நிலையம் 2 நல்லக வுண்டம்பாளையம்,  நீரேற்று நிலையம் 3 திருவாச்சி, நீரேற்று  நிலையம் 4 போல நாயக்கன்பாளையம், நீரேற்று நிலையம் 5 எம்மாம்பூண்டி மற்றும் குன்னத்தூர் குளம் ஆகியவை பார் வையிட்டனர்.  இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர்  ரகுராமன், ததீஒமு ஈரோடு மாவட்ட தலைவர் எம்.அண்ணாத் துரை, த.வி.ச. ஈரோடு மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி,  திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், கரும்பு விவசா யிகள் சங்க தலைவர் கோபிநாத், ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, அவிநாசி கமிட்டி உறுப்பினர்கள் கருப்புசாமி, குமாரசாமி, நடராஜ் ஆகியோர்  கலந்து கொண்டனர்.