சென்னை,அக்.26- பழங்குடியினர் 296 பேரின் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அர சுக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கொண்டாரெட்டி” என்ற இனம் தமிழ் நாட்டில் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே . 1984 வரை வட்டாட்சியர்கள் அனைத்து பழங்குடியினருக்கும் சான்றிதழ் வழங்கி வந்தனர் .பிறகு கொண்டாரெட்டி பழங்குடி யினத்திற்கு 1984 இல் கோட்டாட்சியர் மட்டுமே வழங்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப் பித்தது. 1997 இல் திருத்தணி தனிக்கோட்டமாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியர் வழங்கிய காலத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் சான்றிதழ் பெற்று பல்வேறு அரசு பணிகளில் சேர்ந்து பலர் ஓய்வு பெற்று விட்டனர். 1997 க்கு பிறகு கோட்டாட்சியரிடம் நீதிமன்ற உத்தரவுப்படி 15-க்கும் மேற்பட்ட வர்கள் சான்றிதழ் பெற்று உயர் கல்வி, அரசு வேலையில் உள்ளனர். 11.11.1989-க்கு முன்பு வட்டாட்சியரால் வழங்கப்பட்ட சான்றிதழ் செல்லும் என்று அரசு உத்தரவு வெளி யிட்டுள்ளது இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு திருத்தணி கோட்டத்தில் இருந்த கோட்டாட்சியர் 296 பேருக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கி யிருக்கிறார் .இது தொடர்பாக தலித் அமைப்பு களைச் சேர்ந்த சிலர் புகார் செய்ததையொட்டி பழங்குடியினர் நலத்துறை செயலாளர் விசா ரணை செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யருக்கு உத்தரவிட்டிருந்தார். மூன்றாவது நபரு டைய புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யக்கூடாது என்று அரசாணை மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் ,அப்போது இருந்த செயலாளர் (6-2- 2020 ) சட்ட விரோத மாக இதில் நடந்து கொண்டார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை செயலாளரி டம் நேரடியாக சென்று மனு அளி த்து ஆட்சேபணை யை தெரிவித்தோம்.ஆனால் அந்த ஆட் சேபணையை அவர் கள் கணக்கில் எடுத் துக் கொள்ள வில்லை என்பது இப்போது தான் தெரிய வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 296 சான்றிதழையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன் னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1.75 லட்சம் அரசு ஊழியர்களை ஒரே உத்தரவில் டிஸ்மிஸ் செய்ததை இந்நிகழ்வு நினைவு படுத்துகிறது.
ஆட்சியரின் நடவடிக்கைக்கு கண்டனம்
பழங்குடியினர் சான்றிதழை பொறுத்தவரை மாநில கூர்நோக்கு குழுதான் ரத்து செய்ய முடியும் என்று அரசாணை இருந்தும் மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக ரத்து செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. உள் நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே கருத வேண்டி உள்ளது. அரசாணை எண் 104 நாள் 21.8.2023 மற்றும் 13.2 .2017 அன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு பழங்குடியினர் நலத் துறை செயலாளரின் கடிதத்தில் மாவட்ட ஆட்சி யர் தனது உத்தரவில் இவர்கள் கொண்டா ரெட்டி அல்ல ஆந்திராவில் “கொண்டல ரெட்டி” என்ற முற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் .ஆனால், ஆந்திராவின் எந்த ஒரு சாதி பட்டியலிலும் இப்படியொரு சாதிப் பெயர் இடம் பெறவில்லை. இந்த சாதியைச் சேர்ந்தவர் இல்லை என்று சொல்லலாமே தவிர வேறொரு சாதியைச் சார்ந்தவர் என்று சொல்வ தற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிறகு,எந்த அடிப்படையில் ஆட்சியர் முடி வுக்கு வந்தார் என்றால் கீழப்புடி என்ற கிரா மத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த தாகவும் ,அந்த அறிக்கையில் கீழப்புடி கிரா மத்தில் உள்ளவர்கள் கொண்டாரெட்டி பழங்குடி என்பதற்கான போதுமான தரவுகள், ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் ஆகவே ,296 சாதி சான்றிதழையும் ரத்து செய்வ தாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலம் கேள்விக்குறி
ஒரு கிராமத்தில் மட்டும் செய்த ஆய்வு முடி வைக் கொண்டு கோட்டம் முழுவதும் உள்ள 7 கிராமங்களில் வழங்கப்பட்ட சான்றிதழை எப்படி ரத்து செய்ய முடியும்? ஒரு கிராமத்தில் ஆய்வு செய்து பழங்குடியினர் தான் என்று ஆய்வாளர்கள் சொன்னால் அனைத்து கிரா மங்களிலும் சான்றிதழ் வழங்கி விடுவார்களா? ரத்து செய்ய இதை பயன்படுத்தும் அதிகாரிகள், வழங்குவதற்கு அது அந்த கிராமத்திற்கான அறிக்கை உங்களுக்கு வழங்க முடியாது என்று வேறு கிராமத்திற்கு மறுக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இந்த 296 பேரில் பலர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின் றனர் .சிலர் அரசு வேலைக்குச் சென்றுள்ளனர். இவர்களின் எதிர்காலம் இப்போது கேள்விக் குறியாகி உள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை எடுத்திடுக!
மற்றொன்று, அரசுப்பணியில் அல்லது கல்லூரியில் சேர்ந்த 6 மாத காலத்திற்குள் சான்றிதழ் மெய்த்தன்மை முடிக்க வேண்டும் என்று மாதிரி பட்டேல் வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஐந்தாண்டு கள் கழித்து இப்போது ரத்து செய்வதும் சட்ட விரோதம் தான். எனவே, அரசு ஆணைகள், நீதிமன்ற உத்தரவுகள் எதையும் ஆராயாமல் பிறப்பிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் உத்த ரவை ரத்து செய்வதுடன், இதற்கு காரணமான திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். ஆட்சியாளர்களுக்கு பழங்குடிமக்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம் என கேட்கத்தோன்று கிறது. பழங்குடியினர் நலத்துறை செயலாளர் கேட்டுக் கொண்ட அடிப்படையில்தான் விசாரணை என்றால் விசாரணை அறிக்கையை அரசு செயலாளருக்கு அனுப்பி இருக்கலாமே தவிர முடிவெடுத்து ரத்து செய்யும் அதிகாரம் ஆட்சியருக்கு இல்லை. அரசு என்ன செய்யப் போகிறது? பொருத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.