மனு கொடுக்க சென்ற விவசாயிகள் சங்க தலைவர்கள் பெ.சண்முகம் உள்ளிட்ட பலர் கைது
தென்காசி,மே 16- விளைநிலங்களை அழித்து அதன் வழியாக 4 வழிச்சாலை அமைப்பதை எதிர்த்து மனு கொடுக்கும் போராட்டம் நடத்திய பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தென்காசி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். திருமங்கலத்தில் இருந்து புளியரை வரை நான்கு வழிச் சாலை அமைக்கப் பட உள்ளது. நான்கு வழிச் சாலைக் காக ராஜபாளையம் முதல் புளியரை வரை மூன்று போகமும் விளையக்கூடிய 1800 ஏக்கருக்கும் மேற்பட்ட நஞ்சை நிலங்களை அரசாங்கம் அதிகமான இழப்பீடு தராமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் அளந்து கல்ஊன்றி நிலங்களை கைய கப்படுத்த ஒன்றரை வருடங்களுக்கு முன் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
இந்த முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டமாக இருந்தபொழுது திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி அப்போ தைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சி யரிடம் சங்கம் சார்பில் மனு கொடுக் கப்பட்டது. அப்போது விவசாயி களுக்கு ஆதரவாக மனுவை பரிசீலித்து உரிய முடிவுகளை அரசு நிர்வாகம் அறிவிக்கும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதிமொழி அளித்தார் . அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தென்காசி மாவட்டம் உதய மானதும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சி யரின் உறுதிமொழியை மீறி விவசாயி களுடன் கலந்து ஆலோசிக்காமல் மீண்டும் நான்கு வழிச் சாலை போடு வதற்கான பணிகளை அரசு நிர்வாகம் மேற்கொள்ள ஆரம்பித்தது. இதனை கண்டித்து திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்து விவ சாயிகள் போராட்டக்குழு, எஸ்டிபிஐ கட்சி ஆகியவை இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை அறிவித்தது.
போராட்டம் அறிவித்தது முதல் காவல்துறை கெடுபிடியாக நடந்து கொண்டது. திங்கள்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்டம் முழுவ தும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கி வந்தனர். ஆனால் அவர்களை புதிய பேருந்து நிலையம் அருகிலேயே பேரிகார்டு அமைத்து கயிறு கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் செல்லாமல் தடுத்து நிறுத்திய தோடு அடிமைகளைப் போல மாவட்ட காவல்துறை நடத்தியது. போராட்ட இடத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலா ளர் பெ.சண்முகம் மாவட்டத் தலை வர்களுடன் வருகை தந்தார் . அவர்க ளுக்கு தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிடிவாத மாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல அனுமதி இல்லை என்று மறுத்தார். ஆனால் தலைவர்கள் தடையை மீறிச் செல்வோம் என்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வந்து தலைவர்களிடம் பேசினார். அவரிடம் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாகச் சென்று 10 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப் போம் என்றனர். ஆனால் காவல் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லவிடாமல் தடுப்பதிலேயே குறி யாக இருந்தது. பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை பல மணி நேரம் வெயி லில் காக்க வைத்தனர். அதனால் கடைசி யில் பேரணியாக புறப்பட்ட அவர்களை சில நிமிடங்களிலேயே காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கண்ணன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அ.விஜயமுருகன், மாவட்டத் தலைவர் கணபதி, பொருளாளர் முத்துராஜ், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகி யாசர்கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் உ.முத்துப்பாண்டியன் மற்றும் அனைத்து விவசாய அமைப்புகளின் போராட்டக்குழு நிர்வாகிகள் மீரான் கனி, குவாரி வேணுகோபால், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூன்று குழந்தைகள் 79 பெண்கள் உட்பட 214 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கைது செய்ததற்கு அடையாளமாக காவல்துறை கேட்கும் பெயர் பட்டியல் மற்றும் அங்க அடையாளங்களை கொடுக்க மாட்டோம். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அல்லது அவரது அதிகாரத்திற்குட்பட்ட அலுவ லர் யாராவது ஒருவர் வந்து விளை நிலங்களில் நான்கு வழிச்சாலை அமைக்க மாட்டோம். மாற்று வழியில் அமைப்போம் என்று உறுதிமொழி கூறினால் போராட்டம் கைவிடப்படும். இல்லையேல் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண் முகம் கூறினார். மேலும் அவர் கூறும்போது, பல மாவட்டங்களில் போராட்டம் நடத்தி உள்ளோம். ஆனால் எந்த மாவட்டத்தி லும் தென்காசி மாவட்ட காவல்துறை போல் கொடூரமாக நடந்து கொண்ட தில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வரை எல்லா மாவட்டங்களிலும் அனுமதி கொடுப்பார்கள். பத்து அல்லது பதினைந்து பேர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கச் செல்வோம். ஆனால் இந்த மாவட் டத்தில் தான் காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் கைது செய்து அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். காவல்துறை யினரின் இந்த அராஜகச் செயல் பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.