tamilnadu

50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் மன்னார்குடி பகுதி விவசாயிகள் தவிப்பு

50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் மன்னார்குடி பகுதி விவசாயிகள் தவிப்பு

திருவாரூர், அக். 4- திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் அவற்றை கொள்முதல் செய்து கிட்டங்கிக ளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குருவை அறுவடை பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த  ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்த நிலையில், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 382 நேரடி  நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் சுமார் 2,700 ஏக்கர் பரப்பள வில் குறுவை நெல் அறுவடை பணிகள் நடை பெற்று வரும் நிலையில், அங்கு உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவ சாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதில், கடந்த இரண்டு நாட்களாக விடு முறை தினம் என்பதால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் சுமார் 50 ஆயி ரம் நெல் மூட்டைகள் அங்கு தேக்கம் அடைந்திருக் கின்றன. விவசாயிகள் சாலையின் இரு புறங்களிலும் நெல்மணிகளை கொட்டி காய வைத்து வருகின்றனர். இந்த நெல் மூட்டை களை விற்பனை செய்தால் மட்டுமே அவர்களு டைய செலவு தொகையை எடுக்க முடியும்.  எனவே, உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.