உடுமலை, அக்.4- ஊரக வேலைத் திட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் காத் திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த அதிகாரிகளுட னான பேச்சுவார்த்தை யில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க ஆட்சி யரிடம் பரிந்துரை செய்யப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர். ஊரக வேலை திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளியன்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மடத்துக்குளம் ஒன்றியம் வேடபட்டி ஊராட்சியில் அரசு ஓய்வூதியம் பெறும் நப ருக்கு வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிணறு வெட்ட ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில், சட்ட விதி மீறல் நடத்து உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் நிதி முறைகேட்டின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மடத்துக் குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் என அறிவித்து, விச மற்றும் விதொசவினர் அமர்ந்தனர். முன்னதாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மடத்துக்குளம் வட்டச் செயலா ளர் எம்.எம். வீரப்பன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலை வர் டி.ரவிந்திரன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். குமார், மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் மற்றும் விவ சாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பஞ்சலிங்கம் ஆகியோர் போராட் டத்தை விளக்கிப் பேசினார்கள். பின்னர் காத்திருப்புப் போராட்டம் நடத்திய சங்கத்தினருடன் காவல்துறை, வரு வாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், ஊரக வேலை திட்டத்தில் தனிநபர் கிணறு வெட்ட அனுமதி குறித்து துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும், மேலும் இதர கோரிக்கைகள் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது.