மதுரை, ஜன.3- நெல் கொள்முதல் நிலையங்க ளில் மூடைக்கு ரூ.60 லஞ்சம் கேட்ப தாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் கூறினர். அரசு விவசாயிகளின் நலனுக்காக அந்தந்த பகுதிகளில் நெல்கொள் முதல் நிலையங்களை திறந்து உள் ளது. இங்கு லஞ்சம் தலை விரித்தாடு கிறது. ஒரு மூடைக்கு எங்களிடம் ரூ.60 லஞ்சம் கேட்டு வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர். நாங்கள் தர மறுத் தால் நெல் கொள்முதல் செய்யாமல் காக்க வைக்கின்றனர் என்றனர். நெல் கொள்முதல் மையத்தில் மூடைக்கு லஞ்சம் கேட்டால் கொடுக்க வேண்டாம். அதனையும் மீறி, கேட் டால், விவசாயிகள் புகார் கொடுக்க லாம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கொள்முதல் நிலையங்கள் தொடர் பான புகாரை வாட்ஸ்-அப் எண் 99949 09000 அல்லது கீழ்கண்ட தொலைபேசி 0452-2526888 என்ற எண்ணில் புகார் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
லஞ்சம் வாங்க யார் காரணம்? விவசாயிகளின் புகார்கள், ஆட்சி யரின் அறிவிக்கை குறித்து நெல் கொள்முதல் நிலையங்களில் விசா ரித்தபோது, லஞ்சம் கேட்பதைத் தவிர்ப்பதற்கு அரசின் கொள்கையில் மாற்றம் தேவை என்றனர். கூடுதல் பணம் வசூலிக்கப்படு கிறது. ரூ.40 முதல் ரூ.60 வரை வசூ லிப்பது உண்மை தான் என்பதை ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட விப ரமறிந்த ஊழியர்கள், விவசாயிகள்-தொழிலாளர்கள் பிரச்சனையாகப் பார்ப்பது முற்றிலும் தவறு. ஒரு சுமைப்பணித் தொழிலாளிக்கு வழங்கி வந்த ரூ.3.50 கூலி தற்போது ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஒரு தொழிலாளி நெல்லை இயந்திரத்தில் போட்டு தூற்றி 40 கிலோ சிப்பமாக நெல்லை சாக்கில் பிடித்து 15 தையல்கள் போட வேண் டும். இதற்கு அவர்களுக்கு குறைந் தது ரூ.18 செலவாகிறது.
லாரி மாமூல் வசூலிக்கப்படுகிறது. ஒரு சிப்பத்தை லாரியில் ஏற்ற மாமூல் ரூ.6. கொள் முதல் நிலையம் திறக்கும்போது நெல் சுத்தப்படுத்தும் இயந்திரம், எடை இயந்திரம் உள்ளிட்ட தளவாடச் சாமான்களை கொண்டு வந்து சேர்ப்ப தற்கு குறைந்தது ரூ.5 ஆயிரம் செல வாகிறது. தவிர பத்து நாட்களுக்கு ஒரு முறை குறைந்தது ஆயிரம் சாக்கு களை கிட்டங்கியிலிருந்து எடுத்து வர வேண்டும். 50 சாக்குகள் கொண்ட ஒரு கட்டிற்கு ரூ.10 கொடுக்க வேண்டும். தவிர வண்டி வாடகை கொடுக்க வேண்டும். தற்போது சுமைப்பணித் தொழிலாளிக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் போது மானதல்ல. இதற்கெல்லாம் அரசு எந்த நிதியும் ஒதுக்குவதில்லை.
மதுரை மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்சனைகளை நேரில் ஆய்வு செய்தோ, அல்லது சுமைப்பணித் தொழிலாளர் கள், கொள்முதல் நிலைய ஊழியர் கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக ஊழியர்கள் அடங்கிய கூட் டத்தை நடத்தி யதார்த்தத்தை அறிந்து செலவினங்களுக்கான பணத்தை வழங்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் கூறு கையில், தற்போது நெல்கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் தலை யீடு பெருமளவு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கொள்முதல் செய்ய விரும் பும் விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங் கலை முதலில் பதிவு செய்ய வேண் டும். பின்னர் கிராம நிர்வாக அதிகாரி மூலம் விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இணையசேவை குறைபாடு, குறிப்பிட்ட மென் பொருளை பயன்படுத்துவதில் பிரச் சனை இவற்றால் விவசாயிகள் கொள் முதல் பணம் பெறுவதற்கும், நெல்லைக் கொடுப்பதற்கும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டியது உள் ளது என்றார்.