tamilnadu

img

ஒரே மாதத்தில் உணவு விலை 28% அதிகரிப்பு

பிரபல சந்தை ஆய்வு நிறுவன மான கிரிஸில்  (Crisil) நாடு முழு வதும் நிலவும் உணவு விலையின் அடிப்படையில் வீடுகளில் உணவு தயா ரிக்க ஆகும் செலவை கணக்கிட்டு ஆய்வ றிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் கடந்த ஜூலை மாதத் தில் சைவ உணவின் (Veg Thali) விலை  சுமார் 28% அதிகரித் துள்ளதாகவும், இதே கால கட்டத்தில் அசைவ  உணவின் (non - Veg Thali) விலை சுமார் 11% என்ற அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்துடனான ஒப்பீடு  எனவும், உணவின் விலை உயர்வு நடப்பு  மாதத்தில் மட்டுமல்ல; தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக உயர்ந்து வருவ தாக கிரிஸில் நிறுவனம்.  இந்த விலை உயர்வுக்கு முக்கிய கார ணம் காய்கறிகளின் விலை உயர்வுதான்.  கடந்த ஜூன் மாதத்தில் தக்காளி கிலோ வுக்கு ரூ.33 ஆக இருந்த நிலையில், ஜூலை  மாதத்தில் 233% உயர்ந்து ரூ.110 ஆனது. தக்களியைப் போல ஜூலை மாதத்தில் வெங்காயம் 16%, உருளைக்கிழங்கு 9%,  மிளகாய் 69%, சீரகம் 16% அளவில் உயர்ந்துள்ளது. 

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

உணவு விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டனம் தெரி வித்துளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,”சைவ உணவின் விலை 28 சதவீதமும், அசைவ உணவின் விலை 11 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் தக்காளி விலை 233%  உயர்ந்துள்ளது. கூட்டாளிகள் வாங்கிய ரூ.14.56 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி அரசு சாமானிய மக்கள் மீது துயரங்களை திணிக்கிறது” என விமர்சித்துள்ளார்.