tamilnadu

img

வீழ்ச்சியடைந்த வெங்காயம் விலை : இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, மே 11- வெங்காய விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளை பாது காத்திட அரசு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும் என்று தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மே 10  ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்றது.  மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், மாநில பொருளாளர் கே.பி.பெரு மாள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர்  உட்பட பல இடங்களில் விவசாயிகள்  சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு வெங்கா யத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து ஒரு கிலோ  ஐந்து ரூபாய்க்குத் தான் விவசாயி களிடமிருந்து வாங்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் நிலத்தி லேயே வெங்காயத்தை அழித்திடும் வகையில் ஓட்டுநர் மூலம் உழவு செய்யும் அவல நிலைக்கு விவசாயி கள் ஆளாகியுள்ளனர். இந்த பாதிப் பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க  வேண்டியது அரசின் கடமை என்பதை மாநிலக்குழு சுட்டிக்காட்டி யிருக்கிறது.

நாட்டு வெங்காயம் சில மாதங்க ளுக்கு வைத்திருந்து விற்க முடியும். ஆனால், வீரிய வித்துக்கள் என்ற  பெயரில் கம்பெனிகளால் வழங்கப் படும் விதை மூலம் உற்பத்தி செய்யப் படும் வெங்காயத்தை உடனடியாக விற்பனை செய்யவும், பயன்படுத்த வும் வேண்டும். இல்லையென்றால் அது தக்கையாக மாறிவிடுகிறது. இதனால் உடனடியாக விற்க வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயி கள் ஆளாகியுள்ளனர். எனவே, தமிழக அரசு கிலோ ரூ.30 என்று விலை நிர்ணயித்து வெங்காயத்தை கொள்முதல் செய்து, கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை செய்ய முன்வர வேண்டும். கைமுதலை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கறிக்கோழி வளர்ப்பு ஊதியத்தை உயர்த்துக!

நிறுவனங்கள் கோழி குஞ்சு, தீவணம் தருவது, விவசாயிகள் வங்கி யில் கடன் பெற்று சொந்த நிலத்தில் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை அமைத்து கோழியை வளர்த்து நிறுவ னங்களுக்கு தருவது என்ற வேளாண்  மற்றும் இறைச்சி உற்பத்தி தொழிலில் தமிழ்நாட்டில் நாற்பதாயி ரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கோழி வளர்ப்பு செலவுகள் அதிகரித்துள்ள நிலை யில் பண்ணை விவசாயிகள் கறிக் கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி நிறுவனங்கள் வழங்க வேண்டும் எனவும் மாநிலக்குழு கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் பிராய்லர்  கோழி வளர்த்து தரும் விவசாயிக்கு ஒரு கிலோவுக்கு ரூ.6.50 கூலியாக தரப்படுகிறது. இதுவே அதிகம் இதற்கு மேல் கூலியை உயர்த்திட முடியாது என்று கறிக்கோழி நிறுவ னங்கள் கூறுகின்றனர். மேலும் கூலி  உயர்வு கேட்கக் கூடாது என்றும், அப்படி கூலி உயர்வு கேட்டு பிரச்சனை  செய்பவர்களுக்கு எந்த நிறுவனமும் கோழிக்குஞ்சு இறக்க மாட்டோம் என்றும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளை நிறுவனங்களுக்கான அமைப்பு மிரட்டுகிறது.

விவசாயத்தில் லாபமில்லை, தொடர்ந்து நட்டம் என்ற நிலையில் ஒரு பகுதி விவசாயிகள் வேளாண் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடு கின்றனர். கறிக்கோழி வளர்ச்சி நிறுவனங்களுக்கு தரும் விவசாயி களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கையை அவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண்பதற்கு பதிலாக, கோழி நிறுவனங்கள் கூலி  உயர்த்தி தர மாட்டோம், மீறுபவர்க ளுக்கு கோழிக்குஞ்சு இறக்க மாட்டோம் என்றெல்லாம் மிரட்டு வதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. ஒரு கிலோ கறிக்கோழி வளர்ப் புக்கான கூலியை ரூ.6.50லிருந்து ரூ.12 ஆக உயர்த்தி நிறுவனங்கள் வழங்க கோரி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கமும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானித்துள்ளோம். தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து கறிக்கோழி வளர்ப்பு பண்ணை விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்ற  வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டுள்ளது.