tamilnadu

வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறவில்லை

புதுதில்லி, டிச.26-  கடந்த ஓராண்டாக விவ சாயிகள் நடத்திய வீரஞ் செறிந்த போராட்டத்திற்கு பணிந்து ஒன்றிய மோடி அரசு, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது.  இந்நிலையில் மகா ராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன் றில் பேசிய ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட் டங்களை வாபஸ் பெற்றதில் ஒரு படிதான் பின்வாங்கியுள் ளோம் மீண்டும் அச்சட்டத்தை கொண்டு வருவோம் என்ற தொனில் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு விவசாயிகளும் விவசாயிகள் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தன.  அமைச்சரின் தோமரின் கருத்து குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில், ‘மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடியை தோமர் அவ மதித்துவிட்டார்;

இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. விவசாயத்திற்கு எதிரான மீண்டும் நடவடிக்கை எடுத் தால் மீண்டும் விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டம் நடக்கும். ‘ஈகோ’ ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் தோற்கடிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். கடும் எதிர்ப்பு எழுந்த தால், வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு மீண்டும் கொண்டு வரும் என நான் சொல்ல வில்லை என்று நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்துள்ளார்.  மேலும் அமைச்சர் கூறு கையில், “ ஒன்றிய அரசு சிறப்பான வேளாண் சட் டங்களை கொண்டு வந்தது என்று நான் சொன்னேன். சில காரணங்களுக்காக நாங் கள் அதை திரும்பப் பெற் றோம். ஆனால் விவசாயி களுக்கான நலத்திட்டங்க ளுக்காக ஒன்றிய அரசு தொட ர்ந்து செயல்படும் என்று தான் நான் சொல்ல வந்தேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.