tamilnadu

img

அரசியல் சாசனத்தை அவமதிப்பவரை வெளியேற்றுங்கள்!

புதுதில்லி,பிப்.5-  அரசியல் சாசனத்தை அவமதிப்பவரை வெளியேற்றுங்கள் என்று  நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., ஆவேசமாகப் பேசினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆற்றிய உரை வருமாறு:  குடியரசுத்தலைவர்  தனது உரையில் உரிமைகளையும், கடமைகளையும் பற்றி விளக்கியிருந்தார். அதுசார்ந்த கருத்துக்களை நான் பதிவிட நினைக்கிறேன். நான் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். எனது வீட்டின் உரிமையாளருக்கென்று உரி மைகளும் கடமைகளும் உண்டு. வீட்டின் நிலமும் கட்டிடமும் அவருடைய சொத்து. அவரது உரிமையில் நான் தலையிடுவதில்லை . அந்த உரிமையை மதிக்கிறேன். என்னைப் போலவே தமிழகத்தில் ஒருவர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.

ஆனால் அவர் வாடகை செலுத்துவதில்லை. அவருக்கு சட்டம் அந்த சலுகையை வழங்கியுள்ளது. ஆனால் அவரோ வீட்டின் உரிமையாளரின் உரி மையை நிராகரிக்கிறார். உரிமையாளரின் தீர்மா னத்தை திருப்பி அனுப்புகிறார். நான் யாரைப் பற்றி குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க வும், ரத்து செய்யவும் அதிகாரம் கொண்ட ஒருவர், மக்களாட்சியின் அதிகாரத்தை குறைக் கவும், ரத்து செய்யவும் முயல்வது கடும் கண்ட னத்திற்குரியது. ஆறரைக்கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட அவையின் தீர்மானத்தை திருப்பி அனுப்புவ தும், ”ஏழை மக்களின் கல்வியை பாதிக்கும் தீர்மானம்” என்று கருத்து கூறுவதும் ஜனநாய கத்தை கேலிக்கூத்தாக்குவதாகும். நீட் தேர்வுக்கு எதிராக இந்த அவையில் நாங்கள் விடாது குரல் எழுப்பிக்கொண்டேயி ருக்கிறோம்.

எங்கள் குரலுக்கு நீங்கள் மதிப்ப ளிப்பதேயில்லை. ஆனாலும் தமிழகத்தின் குரல் ஓயப்போவதில்லை. டிசம்பர் மாதம் காசியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் காசியைப் பற்றி கூறும் போது, “காசியை வெறும் வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடியாது. உணர்வுகளின் மூலமே வெளிப்படுத்த முடியும், அங்கு உண்மையே பண்பாடு, அன்பே பாரம்பரியம்” என்று கூறினார். பிரதமரின் அதே வார்த்தைகளால் இந்த அவையில் நான் பதிவு செய்கிறேன். தமிழ கத்தை வெறும் வரைபடத்தைப் பார்த்து நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. மூவாயிரமாண்டு முற்போக்கு பாரம்பரியமும், சமத்துவ சிந்தனை யும், சமூக நீதி கோட்பாடும் விளைந்த நிலம் அது. அந்த நிலத்திலிருந்து தொடர்ந்து எதிரொ லிக்கும் குரலை நீங்கள் நசுக்கி இன்பம் காண்கிறீர்கள்.

 பிரிட்டிஷ் ஆட்சியில் கூட மாநிலத்தின் பிரதி நிதிகள் தில்லி அதிகாரிகளை சந்திக்க பத்து நாட்கள் காத்திருந்ததாக நான் படித்ததில்லை. ஆனாலும் காத்திருந்து நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். கேட்பதால் எங்களை அதிகார மற்றவர்களாகவும், தருவதால் உங்களை அதி காரம் படைத்தவர்களாகவும் நீங்கள் கருதிக் கொள்கிறீர்கள்.  கேட்பதும் ஏற்பதும் ஒரு உரையாடலின் இருபகுதிகள். மாநிலமும் ஒன்றியமும் சம அதிகாரம் கொண்ட இரண்டு தட்டுக்கள். அதைத்தான் அரசியல் சாசனம் சொல்கிறது. அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். எங்களின் குரல் ஒரு மாநிலத்தின் குர லல்ல, இந்திய மாநிலங்களின் குரல். இந்திய அரசியல் சாசனத்தின் குரல், அதற்கு செவிசா யுங்கள், செவிசாய்க்க மறுப்பவரை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.