யுரேகா யுரேகா என்ற வார்த்தைக்கு சொந் தக்காரர். ஆர்க்கிமிடிஸ். அற்றைய கால கட்டத்தில் தலைசிறந்த கணிதவியலாள ராக போற்றப்பட்டவர். இவர் சிராகுஸ் நகரில் பிறந்தவர். இளம் வயதிலேயே அலெக் ஸாண்டரியா சென்று கல்வி கற்றார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக அலெக் ஸாண்டரியா நூல கத்தில் எரடாஸ் தெனஸ், அப்பலோ னியஸ் ஆகியோரு டைய நட்பு அங்கு அவ ருக்கு கிடைத்தது. இவர் இயந்திர கண்டுபிடிப்பில் புகழ்பெற்று இருந்தார். பொதுவாக ஜனங்களை கவர்ந்து இழுப்பது இயந்திர கண்டுபிடிப்புகள் தானே. இன்றைக்கும் கூட ஏஐ செய்தி வாசிப்பாளரை நாம் வியந்து பார்க்கிறோம் இல்லையா? இவருடைய கண்டபிடிப்புகள் அன்றைய மன்னருக்கு போர்க்காலங்களில் பெரிதும் உதவியதோடு வெற்றிபெறவும் வைத்துள்ளது. அரசரின் பயன்பாட்டிற்காகவே பல நுணுக்கமான கருவிகளை கண்டுபிடித்தார். குறிப்பாக கோளரங்கம், தொலை தூர இலக்கு களைக் தாக்குவ தற்கான ராட்சதக் கலன் கருவிகள், கப்பல்களை இழுத் துக் கட்டும் கூட்டுக் கப்பிகள், நீர்திருகு இன்னும் இது போன்ற பல கருவி களை கண்டறிந்தார். இவை அனைத்தும் அவர் கணக்கோடு கை கோர்த்ததால் தான் சாத்திய மாயிற்று என்பதை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. ஆர்க்கிமிடிஸ் தன்னுடைய கண்டுபிடிப்பு களை மிக விரிவாக விளக்கினார்.
பரவலையத்தின் பரப்பை காணும் விஷயத்தில் மிக விரிவான விளக்கத்தை முன்வைத்தார். அதற்கு அவர் கூறும் காரணம் கண்டுபிடிப்பு என்பது வேறு. கண்டு பிடித்ததை நிரூபித்தல் வேறு. இரண்டிற்கும் வெவ்வேறான மன நிலையும், செயல்திறனும் தேவை. ஏதேனும் ஒரு வகையில், அல்லது முறையில் புதிருக்கான விடையை யூகிக்க வேண்டும். யூகித்த விடையானது மிகவும் சரியானது என நிரூபித்திட வேண்டும். அதனை அனைவரும் ஒத்துக் கொள்ள வேண்டும். அப்படியான செய்முறையை நிரூபண முறையை பயன்படுத்த வேண்டும். கோளம், கூம்பு போன்ற பல வடிவகணித வடி வங்களுக்கு புறப்பரப்பும், கன அளவும் கண்டு பிடிக்க உதவும் சூத்திரத்தை நிரூபித்தவர் ஆர்க்கி மிடிஸ். சுருள் வளைவரைக்கான தொடுகோடு பற்றிய தேற்றமும், அச் சுருள் வளைவரை வில்லின் முதல் சுற்று அடைந்திடும் பரப்பு பற்றிய தேற்ற மும். இவற்றின் தேற்றமும், அதன் நிரூபணமும் அர்கிமிடிஸால் கொடுக்கப்பட்டது. இன்றைக்கு சொல்லுவது போல அன்றைக்கே ‘பை’ யை ஆராய்ந்தவர் ஆர்க்கி மிடிஸ். ‘பை’ என்பது ஒரு வட்டத்தின் சுற்றள விற்கும், விட்டத்திற்குமான விகிதம் என்று கூறினார். கி.மு.212 இல் சிராகுஸ் நகரை ரோமன் படை கள் கைப்பற்றின. அப்போது அந்த நகரில் கொலைகளும், கொள்ளைகளும் நடந்தன. அப்போது ரோமன் வீரனால் ஆர்க்கிமிடிஸ் கொல்லப்பட்டார். அவர் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் அரிய கண்டுபிடிப்பு என நினைத்தது. ஒரு உருளையின் உள்ளே வைக்கப்படும் கோளத்தின் கண அளவு என்பது உருளையின் கண அளவில் மூன்றில் இரண்டு பங்கு என்பதாகும். இதனை அவரது கல்லறையில் பதிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதால் ரோமானியர்கள் அவரது கல்லறையில் இதனை வெட்டி வைத்தனர். சிதைந்து போன அவரது கல்லறையை கண்டுபிடிக்க இந்த கல்வெட்டு உதவியது.