சென்னை, ஜூன் 26- தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங் களில் மருத்துவக் கல்லூரிகள் அமைத்து தர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை தமிழ்நாடு வந்தடைந்தார் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுவிக்மாண்டவியா. சனிக்கிழமை விழுப்புரம் மாவட்ட த்தில் உள்ள ஒரு சுகாதார நிலை யத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் நடை பெற்ற சைக்கிள் பேரணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சென்னை ஓமந்தூ ரர் பன்நோக்கு மருத்துவ மனையில் உள்ள ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்து வமனையில் நடைபெற்ற கருத்த ரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர், ஆவடியில் புதிதாக தொடங்கப்படவுள்ள மத்திய அரசின் ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: நொச்சிக்குப்பத்தில் காசநோய் இருப்பவர்களை கண்டறிவதற் கான எக்ஸ்ரே வசதியுடன் கூடிய 23 வாகனங்களை தமிழக முதலமைச்சர் வரும் 1 ஆம் தேதி துவக்கி வைக்கி றார். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப் படுகிற இன்னுயிர் காப்போம் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியா முழுமைக்கும் சென்றடைய உள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சி யாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக மருத்து கல்லூரி அமைக்க வேண்டும் என்றும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி அமைத்து தர வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நமது கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சர் நிறைவேற்றி தருவார் என நம்புகிறோம் என அமைச்சர் சுப்பிரம ணியன் தெரிவித்தார்.