சென்னை, ஜன. 19- தமிழ்ச்சமூக வரலாற்றை விளக்கும் வகையில் மதுரையில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஜன வரி 19 புதனன்று சு.வெங்கடேசன் எம்.பி. சந்தித்து மதுரையின் வளர்ச்சித் திட்டங் களுக்கான 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புற நகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன் ஆகியோர் இருந்தனர். பின்னர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளோம். மதுரையினுடைய அல்லது தென் தமிழ கத்தினுடைய முக்கியமான சமூக பிரச்ச னைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணமாக இருப்பது வேலையின்மை, வேலையின்மைக்கு அடிப்படை காரண மாக இருப்பது தொழில் வளர்ச்சியின்மை, முதலீடுகள் வராதது. மதுரையில் தொழிற் பேட்டைகள் குறைவாக உள்ளது. மதுரை யில் இயங்கக் கூடிய தொழிற்சாலைகளில் 5 விழுக்காடு தொழிற்சாலைகள் மட்டும் தான் தொழிற்பேட்டைக்குள் உள்ளன. எனவே மதுரையில் கூடுதலாக 4 தொழிற் பேட்டைகள் உருவாக்க வேண்டும். அதே போல் மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். மதுரைக் கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற் சாலைகளுக்கு 10 விழுக்காடு இடங்களை வகைப்படுத்த வேண்டும் என்று தெரி வித்துள்ளோம்.
மதுரையில் உள்ள மத்திய சிறைச் சாலை 100 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரத்தின் மையப்பகுதியில் அமைக்கப் பட்டது. சென்னையின் மையப்பகுதியில் இருந்த சிறைச்சாலை எப்படி புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதோ, அது போல் இந்த சிறைச்சாலையையும் மதுரை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். சுமார் 35 ஏக்கர் உள்ள அந்த இடத்தில் உலகப்புகழ் பெற்ற அருங்காட்சி யகம் அமைக்க வேண்டும். லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சி யகம் உலக நாகரிகங்களின் வரலாற்றை பேசுகிறது. அதைப்போல் ஒரு அருங்காட்சி யகம் இந்தியாவில் இல்லை. இந்திய வர லாற்றின் தாய்நிலமாக இருப்பது தமிழக மும், மதுரையும்தான். தமிழ் பண்பாட்டின் தலைநகரமாக இருப்பது மதுரை. எனவே சிந்துவெளி நாகரிகம் முதல் வைகை கரை நாகரிகம் என்ற அடிப்படையில் ‘‘சிந்து முதல் வைகை வரை” என்ற தலைப்பில் மனிதகுல வரலாற்றை, தமிழ் சமூகத்தினு டைய வரலாற்றை விளக்குகின்ற வகை யில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். இந்த அருங்காட்சியகம் அமைக்க உலகளவில் உள்ள வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை கூறும் வரலாற்று சின்னமாக குமரி முனையிலே அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இருப்பது போல, தற்போதைய தமிழக முதல் வரின் பங்களிப்பாக இந்த அருங்காட்சி யகம் அமைக்கப்பட வேண்டும்.
கூடுதலாக கல்லூரிகள் - மேம்பாலங்கள் தேவை
மதுரையின் கல்வி வளர்ச்சிக்கு கூடுத லாக தொழில்நுட்பக் கல்விக் கூடங் களும், கூடுதலான கல்லூரிகளும் உரு வாக்கப்பட வேண்டும். விவசாயம் சார்ந்த வளர்ச்சிக்கு அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும் என்று விவசாயிகள் கடந்த 30 நாட் களுக்கும் மேலாக போராடிக் கொண்டி ருக்கிறார்கள். எனவே அந்த சர்க்கரை ஆலையை இயக்கிட அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மதுரை நகரத்தில் மிக மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். அடிப்படை கட்டுமான திட்டங்களை மேம்படுத்தும் வகையில் 8 மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த மதுரை விமான நிலையத்திற்கான சுரங்கப்பாதை, இரண்டு உள்வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை ஆகிய 3 திட்டங்களுக்கும் விரை வில் உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை மருந்துசார் மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (நைபர்), மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்று வது ஆகிய கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற தமிழக அரசு இன்னும் கூடுதலாக அழுத்தம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித் துள்ளோம். இவற்றில் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலித்து மதுரையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்து வம் அளிக்கும் என முதல்வர் தெரி வித்துள்ளார் என்று அவர் கூறினார். அருங்காட்சியகம் அமைப்பது குறித்து முதல்வர் என்ன தெரிவித்தார் என்ற கேள்விக்கு, இந்தியாவில் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. ஆனால் அவை எல்லாம் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால் நாம் கோரியிருப்பது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம், பெர்லின் அருங் காட்சியகம் போல் உலக நாகரிகங்களின் வரலாற்றை கூறும் வகையிலான அருங் காட்சியகம். அதை முதல்வர் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். எனவே அவர் பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம் என்றார்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார வாகனங்கள் பங்கே ற்க மறுக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழு வதும் அன்றைய தினம் அலங்கார வாக னங்கள் வலம் வரும் என்று முதல்வர் அறி வித்துள்ளாரே என்ற கேள்விக்கு, இது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாகு பாட்டின், புறக்கணிப்பின் ஒரு பகுதி. மொழி வளர்ச்சி, மாநிலத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனை, நிவாரண நிதி சார்ந்த பிரச்ச னை என எல்லாவற்றிலும் தமிழகம் புறக் கணிக்கப்படுகிறது. வெள்ள நிவாரணம் குஜராத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக் கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்திற்கு 5 சர்வதேச விமான நிலையங்கள் உடனே அறிவிக்கப்படுகின்றன. ஆனால் தமிழகம் என்றால் நீங்கள் பொறுமையாக, பெருந்தன்மையோடு இருக்க வேண்டும். நாங்கள் நியாயமாக நடந்து கொள்கிறோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு இதுபோன்ற அறிவுரைகள் தேவை யில்லை, தேவை எங்களுக்கான உரிமை. அதற்காக ஓங்கி குரல் கொடுக்க வேண்டிய நேரமிது. முதல்வரின் அறிவிப்பு மிகவும் உற்சாகமான அறிவிப்பு. முதல்வருக்கு 3 புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கினோம். 3 புத்தகங்களும் வ.உசி. குறித்த புத்தகம். ஏனென்றால் வ.உ.சி. கடல் பொதுவானது, காற்று பொதுவானது. ஆனால் அதை பயன்படுத்தி அதன் மீது நடத்தப்படும் அரசியல் எங்களது லட்சியத்தோடு சம்பந்தப்பட்டது என்பதை உலகிற்கு உணர்த்தியவர். வருகின்ற குடியரசு தினம் தமிழகத்தின் தனி முத்திரையோடு அமைய உள்ளது என்பதைத்தான் முதல்வரின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. முதல்வர் அறிவித்துள்ள அந்த அறிவிப்பு தமிழ்ச் சமூகத்தினுடைய கம்பீரத்தை வெளிப்படுத்துகிற அறிவிப்பு என்றார்.