tamilnadu

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுக!

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுக!

சென்னை, ஜூலை 29 - திருநெல்வேலியில் ஐ.டி. துறை  ஊழியரான கவின்குமார் சாதி  ஆணவப் படுகொலை செய்யப் பட்டதற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரி வித்துள்ளது.  மேலும், சாதி ஆண வப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஆறு முகமங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் - ஆசிரியை தமிழ்செல்வி தம்பதியரின் மகன் பொறியாளர் கவின்குமார் (28) சென்னையில் ஐ.டி. துறையில் பணி யாற்றி வந்தார்.  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி நகரைச் சேர்ந்த காவல்துறையில் பணியாற்றும் சரவணன் - கிருஷ்ண குமாரி தம்பதியரின் மகள் மருத்து வர் சுபாசினி (சித்தா). இவர்கள் இரு வரும் ஒருவரை ஒருவர் நேசிப்ப தோடு திருமணம் செய்து கொள்ள  முடிவு செய்ததாக தெரிகிறது. சாதிய ஆதிக்க உணர்வின் கார ணமாக இதனை சகித்துக் கொள்ள  முடியாத சுபாசினியின் தம்பி சுர்ஜித்  27.7.2025 அன்று கவினை அரி வாளால் வெட்டிப் படு கொலை செய்துள்ளார். ஐ.டி துறை யில் வருமானம் பெறுகிற பொறியா ளராக இருந்தாலும், அவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற  காரணத்திற்காக கவின்குமாரை தனது சகோதரி திருமணம் செய்தால்  தனது குடும்பத்தின் “சாதிப் புனிதம்” கெட்டுவிடும் என்ற  பிற்போக்குத்தனமான சிந்தனை தான் இப்படுகொலைக்கு காரண மாக இருக்கிறது. மதிப்புமிக்க இளம் உயிர்கள் சாதி ஆணவப் படு கொலை செய்யப்படுவது தொடர் கிறது. இதனை வழக்கமான ஒரு செய்தியாக அரசும், சமூகமும் கடந்து செல்வதும் தொடர்கிறது. இப்படுகொலையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்ற வாளிகள் மீதான வழக்கை, தகுதி யான அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து விரைந்து நடத்தி சட்டப் படியான தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.  இக்கொடூரமான கொலை நடந்துள்ள பின்னணியில், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் இயற்றிட வேண்டும் என்று மீண்டும் வலி யுறுத்துகிறது.  இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.