தமிழ்நாட்டில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் பல்லா வரத்திலும் (சென்னைக்கு மிக அருகில்), திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையிலும், வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை என மூன்று இடங்களில் சனியன்று (பிப்.17) ஒரே நாளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறு கிறது.
பல்லாவரம்
சென்னை அருகே பல்லாவரத்தில் (செங்கல்பட்டு மாவட்டம்) வரும் பிப்.17-ஆம் தேதி (சனியன்று) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மொத்த காலியிடம் : 15,000, இடம் : வேல்ஸ் கல்லூரி, பல்லாவரம், நாள் : பிப். 17 (சனியன்று) நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை கல்வி தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மொத்த காலியிடம் : தோராயமாக ஆயிரக்கணக்கில், நாள் : பிப். 17 (சனியன்று) இடம் : தூய யோவான் கல்லூரி, பாளையங்கோட்டை கல்வி தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை நேரம் : காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை வேலூர் வேலூர் மாவட்டம் கொசப்பேட்டையில் வரும் சனியன்று (பிப். 17) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளது. மொத்த காலியிடம் : தோராயமாக ஆயிரக்கணக்கில் இடம் : வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, கொசப்பேட்டை கல்வி தகுதி : 5-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, நாள் : பிப். 17 (சனியன்று) நேரம் : காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பு, 12-ஆம்வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, பொறியியல், தொழில் நுட்பக் கல்வி, செவிலியா், பாா்மஸி, தொடர்புக்கு : 0416-2290042, 9499055896 முக்கிய குறிப்பு : மேற்குறிப்பிட்ட 3 வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.