tamilnadu

img

தூய்மைப் பணியை தனியாருக்கு விடுவதா? ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.6- திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார் முத லாளிக்கு காண்ட்ராக்ட் விடுவதை கைவிடக் கோரி மாநகராட்சி அலு வலகம் முன்பு சிஐடியு திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கம், துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாநகராட்சி தூய்மைப் பணி யை தனியார் முதலாளிக்கு காண்ட்ராக்ட் விடுவதை கைவிட வேண்டும். ஆட்குறைப்பு செய்யக்கூடாது. அரசாணைப் படி அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும். அதுவரை திருச்சி மாவட்ட ஆட்சியர் தீர்மா னித்த தினக்கூலி ரூ.550 ஐ அமல் படுத்த வேண்டும். சுய உதவி குழு தினக்கூலி தூய்மைப் பணி யாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை சுத்தம் செய்ய நவீன இயந்திர ரோபோக்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டன.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க  மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், துப்புரவு சங்க மாவட்ட செயலாளர் மாறன்,  மாவட்ட பொறுப்பாளர் ராஜூ, மாணவர் சங்க மாவட்ட செயலா ளர் மோகன், மெடிக்கல் ராமச் சந்திரன், விஜயன், டோம்னிக் ஆகியோர் விளக்கிப் பேசினர். இதில் 400க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.