மதுரை, ஜூன் 21- ஓய்வுபெறும் நேரத்தில் அரசு ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கொடைக்கானலில் ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதி யர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடை பெற்றது. கொடைக்கானல் செண்பகனூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் பரமேஸ்வரன், மாநிலச் செயலா ளர் தீ. சடையப்ப விநாயக மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத் தலைவர் மாணிக்கம் வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலர் பா.ரவி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். கூட்டத்தில், அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் அவர்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட எந்த குற்றச்சாட்டுகளாக இருந்தாலும் ஆறு மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பணி ஓய்வு பெறும் நாளில் அவரை பணியிடை நீக்கம் செய்வது தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு களாக நடைபெறுகிறது. அரசு ஓய்வூதியர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசுப் பணியில் இருக்கும் போது மருத்துவத்திற்காக மாதந்தோறும் ரூ. 150-காப்பீட்டு பிரி மியத் தொகையாக வசூல் செய்கின்றனர்.
ஓய்வு பெறு பவர்களிடம் ரூ. 350-காப்பீட்டு பிரிமியத் தொகையாக மருத்துவத்திற்கு பிடித்தம் செய்கின்றனர். ஆனால் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற இயல வில்லை. எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் ஓய்வு பெறும் அரசு ஊழி யர்கள் பயன்பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பென்சன் விதிகளில் இன்றிருக்கக்கூடிய கம்யூ டேஷன் என்ற தொகையை அரசு ஊழியர்கள் கடனாக பெறுகிறோம். இந்தத் தொகை பிடித்தம் செய்வதற்கு 15 ஆண்டுகள் என்பது அதிகமாக உள்ளது. இதைக் குறைத்து 12 ஆண்டுகளில் இந்த பிடித்தத்தை நிறுத்த வேண்டும். 80 வயதானவர்களுக்குத்தான் 20 சதவீதம் கூடுதல் பென்சன் என்ற சட்ட விதிகள் இன்று இருக்கிறது. தமிழகத்தில் 80 வயது என்பது மிக அதிகப்படியாக இருக்கி றது. அந்தப் பலனை அனுபவிக்கும் அரசு ஊழியர்கள் சொற்பமாகவே உள்ளனர். எனவே 70 வயது முடிந்த வுடன் பெறக்கூடிய பென்சனில் 20 சதவீதத்தை அதிகரித்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.