tamilnadu

img

சிபிஎம் மாநில மாநாட்டில் உணர்ச்சிமிகு கொடியேற்று நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு 24ஆவது மாநில மாநாடு ஜனவரி 3 வெள்ளியன்று விழுப்புரத்தில் எழுச்சியுடன் துவங்கியது. முதல் நிகழ்வாக பாட்டாளி வர்க்க உதிரச் செங்கொடியை கட்சியின் மூத்த தலைவரும் மாநிலக்குழு உறுப்பினருமான எஸ்.ஏ.பெருமாள் ஏற்றி வைத்தார். முன்னதாக மதுரையிலிருந்து தியாகிகள் நினைவாக எடுத்துவரப்பட்ட மாநாட்டுக் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., ஆகியோர் தலைமையிலான குழுவினரிடமிருந்து மூத்த தலைவர் ஏ.லாசர் பெற்றுக் கொண்டார். புதுவை சப்தர் ஹஷ்மி கலைக்குழுவினரின் உணர்ச்சிமிகு செங்கீதங்களுக்கு  இடையே  மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.