tamilnadu

img

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்க அவசரச் சட்டம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு

சென்னை, ஜூன் 10- ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய  அவசர சட்டம் நிறைவேற்று வது தொடர்பாக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு  தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. ஆன்லைன் ரம்மி  விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயர மான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன. இது தொடர்பாக  மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை கள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  தலைமைச் செயலகத்தில் வியா ழனன்று (ஜூன் 9) நடைபெற்றது. சிறப்பு குழு இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளை விக்கும் தன்மையைக் கண்டறியவும்; இவ்விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும்; விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப் படுத்தவும் தீவிர விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துருவின் தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நே ஹா அமைப்பின் நிறுவனரும் உளவி யலாளருமான டாக்டர்  லட்சுமி விஜய குமார், காவல்துறை கூடுதல் இயக்குநர்  வினித் தேவ் வான்கடே, ஐபிஎஸ் அலுவ லர்கள் ஆகியோர் அடங்கிய குழு  ஒன்றை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இக்குழு 2 வாரங்களுக்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இப்பிரச்சனைக்கு உடனடித் தீர்வுக் காணவேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழி காட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்ட மாக அமையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.