tamilnadu

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியமே கூலி வழங்க கோரி தர்ணா போராட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியமே 
கூலி வழங்க கோரி தர்ணா போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 25-  மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தப்படுத்த வேண்டும். வாரியமே தினக் கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய மண்டல அளவிலான தர்ணா போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. திருச்சி தமிழக அரசு 2021 சட்டமன்ற தேர்தலின்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டு காலமாக சம்பளம் இல்லாமல் பணியாற்றும் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாய் அன்று திருச்சி மண்டல அளவிலான தர்ணா போராட்டம் நடைபெற்றது.  தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி வட்டச் செயலாளர்கள், திருச்சி பழனியாண்டி, புதுக்கோட்டை நடராஜன், திண்டுக்கல் திருமலைசாமி, பெரம்பலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். திருச்சி மண்டலச் செயலாளர் அகஸ்டின் நிறைவுரையாற்றினார். வட்டத்தலைவர் நடராஜன் நன்றி கூறினார். தஞ்சாவூர்  தஞ்சாவூர்  மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலக வாயிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மண்டலச் செயலாளர் எஸ். ராஜாராமன் தலைமை வகித்தார். கிளைத்தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் வரவேற்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் துவக்கவுரையாற்றினார். தஞ்சை கிளைச் செயலாளர் பி.காணிக்கை ராஜ், நாகப்பட்டினம் கிளைச் செயலாளர் எம். கலைச்செல்வன், திருவாரூர் கிளைச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற மின் ஊழியர் அமைப்பின் மாநிலச் செயலாளர் டி. கோவிந்தராஜ் நிறைவுரையாற்றினார். கிளைப் பொருளாளர் எஸ். சங்கர் நன்றி கூறினார். இதில், மாவட்ட, மண்டல அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.