tamilnadu

அகில இந்திய பொது வேலை நிறுத்தம்: மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்க முடிவு

திருச்சி, பிப்.26- பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க மார்ச் 28,29 ஆகிய தேதி களில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் அனைவரும் பங்கேற்பது என்று முடிவு  செய்துள்ளனர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம்  திருச்சிமன்னார்புரத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். ஒன்றிய பாஜக அரசு பொதுத்துறை களை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கைகளை படுவேகமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலை யில் மின்சாரம், போக்குவரத்து, இன்சூரன்ஸ், வங்கி, ரயில்வே  உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை களையும் பாதுகாக்க வேண்டி வரும் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் 21வது பொது வேலை நிறுத்தத்தில் மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்பது என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழக மின்வாரியத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நிரந்தப்படுத்த வேண்டும். கேங்மேன் ஊர்மாற்றம், காலமுறை ஊதியத்துடன் பயிற்சி காலம் குறைப்பு, கள உதவியாளர் பணிமாற்றம், தகுதி வாய்ந்தவர்களுக்கு உள்முகத்தேர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியு றுத்தப்பட்டது. மின்வாரியத்தில் உள்ள 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை கமிட்டி அமைக்கப்பட்டு 2  ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், மின்வாரிய ஊழியர்கள், பொறி யாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்கி 1.12.2019 முதல் நிலுவை  தொகையுடன் வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர்.