சென்னை, ஜூன் 20- விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட குடும்ப ஓய்வூ தியத்தை உடனே வழங்க வேண்டும் என மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் பின்புறம் திங்க ளன்று (ஜூன் 20) தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் தலைமை யில் நடைபெற்ற போராட்ட த்தை சிஐடியு துணைப் பொதுச் செயலாளர் வி.குமார் துவக்கி வைத்தார். துணைத்தலை வர்கள் எஸ்.ராஜாமணி, என்.சின்னசாமி, ஜி.பஷீர், துணைப் பொதுச் செயலாளர்கள் இரா.ராமநாதன், வி.பிச்சைராஜன், பொருளாளர் ஏ.பழனி, செய லாளர் எஸ்.கணேசன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசி யேஷன் மாநில பொதுச் செயலாளர் கே.அருள்செல் வன், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல. ஸ்ரீதரன், பொதுச்செயலாளர் ராகவேந்திரன், அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செய லாளர் கர்சன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைப் பொதுச்செயலாளர் எம்.பாலசுப்பிரமணி வரவேற்றார். செயலாளர் ர.ராஜமணி நன்றி கூறினார். இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 2003க்கு முன்பும் பின்பும் ஓய்வு பெற்ற மஸ்தூர் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், வைரவிழா அன்பளிப்பாக 3 விழுக்காடு உயர்வை அனைத்து ஓய்வூதி யர்களுக்கும் வழங்க வேண் டும், ஒன்றிய அரசு அறிவித்த அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பா ட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.