tamilnadu

img

தரைக்கடை வியாபாரிகள் வெண்டிங் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல்

தரைக்கடை வியாபாரிகள் வெண்டிங் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல்

சிஐடியு, ஏஐடிசியு வேட்பு மனு தாக்கல் 

திருச்சிராப்பள்ளி, மே 17-  திருச்சி மாநகராட்சி தரைக்கடை வியாபாரிகளுக்கான வெண்டிங் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதையொட்டி, சிஐடியு, ஏசிஐடியு கூட்டணி சார்பில், 6 இடங்களுக்கு வெள்ளியன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிஐடியு சார்பில் எஸ். செல்வி டி. கணேசன், திருவெறும்பூர் கணேசன், ஏஐடியுசி சார்பில் அன்சார்தீன், குணா, சுமதி ஆகியோர் திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையரிடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். 6 வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று சிஐடியு, ஏஐடியுசி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், வெற்றிபெற சிஐடியு மாநகர் மாவட்டக் குழு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.