காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு'
பொள்ளாச்சி, மே 22- வால்பாறை அருகே உள்ள சோலை யார் அணை பகுதியில் காட்டுயானை தாக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனக்கோட்டம், மானாம்பள்ளி வனச் சரகத்திற்குட்பட்ட சோலையார் அணை இடதுகரைப் பகுதியில் ஏராளமான குடி யிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் வியாழனன்று அதிகாலை சுமார் 1:30 மணி அளவில் மேரி(72) மற் றும் அவரது வீட்டின் அருகே குடியி ருந்து வரும் தெய்வானை (75) ஆகிய இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்து காட்டு யானை சமையலறை கதவை உடைத்த போது இருவரும் பயந்து தப்பியோட முற்பட்டனர். ஆனால், மேரி யானையி டம் சிக்கிக்கொண்டார், யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. தெய்வானை யானை தாக்கு தில் இருந்து தப்பிக்க முயற்சித்த போது கீழே விழுந்து படுகாயம் அடைந் தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு. பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.இச்சம்பவத்தை தொடர்ந்து மனித வன உயிரின மோதல் தடுப்புக் காவ லர்களைக் கொண்டு அப்பகுதியில் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் குடும் பத்திற்கு வனத்துறை சார்பில் உடனடி நிவாரணத் தொகையாக ரூ.50,000 வழங்கப்பட்டது.