tamilnadu

img

ககன்யான் திட்ட செயற்கைக்கோளுக்காக புதிய ராக்கெட் தயாரிக்க முயற்சி

ககன்யான் திட்ட செயற்கைக்கோளுக்காக புதிய ராக்கெட் தயாரிக்க முயற்சி

திருநெல்வேலி, அக்.19- மனிதர்களை விண் வெளிக்கு அனுப்பும் ககன் யான் திட்டத்தில்  80 ஆயிரம் கிலோ செயற்கைக்கோளை சுமந்து செல்​லும்  வகையில் புதிய ராக்கெட் தயாரிக்கும் முயற்சி நடைபெறுகிறது என்று  இந்​திய விண்​வெளி ஆராய்ச்சிக் கழக (இஸ்​ரோ) தலை​வர் வி.நாராயணன் தெரிவித்தார்.  திருநெல்​வேலி மாவட்​டம் வடக்கன்​குளத்​தில் உள்ள தனி​யார் கல்லூரி யில் நடைபெற்ற விழாவில் இஸ்​ரோ தலைவர் வி.நாரா யணன்  பங்கேற்றார்.  இதன் பின்​னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய ​தாவது: இந்​திய வானிலை ஆராய்ச்​சிக்கு அதிக அள வி​லான செயற்​கைக்கோள்​களை அனுப்பி இருக்கிறோம். இதனால், வானிலை குறித்த தகவல்​களை மிகத் துல்​லியமாக, முன்​கூட்​டியே பெற முடி கிறது. மீனவர்​கள் கடலில் எல்​லையை கடக்​காமல் இருக்​க​வும், மீன்​கள் அதி​க​மாக உள்ள பகு​தி​களை அறியவும், ஆயிரத்​துக்கும் மேற்பட்ட இணைய செயலிகளை உரு​வாக்கி கொடுத்​துள்​ளோம். அதன் மூல​மாக தமிழிலேயே தக வல்​களைப் பெற முடி​யும். ககன்​யான் திட்​டத்​துக்​காக 80 ஆயிரம் சோதனை​கள் நடை​பெற்​றுள்​ளன. இத்​திட்​டத்​தில் முதலில் 3 ஆளில்லா ராக்​கெட்​களை விண்​ணுக்கு அனுப்பி சோதனை செய்த பின்​பே, ஆட்களை விண்​ணுக்கு  அனுப்​புவோம். அதற்​கான முதல் ராக்​கெட் இந்த ஆண்டு இறு​தி​யில் விண்​ணுக்கு செலுத்​தப்​படும். அடுத்த ஆண்டு 2 ராக்​கெட்​டு​கள் ஏவப்​படும். விண்வெளி​யில் இருக்கும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்​பட்​டால், அதிலிருந்து தப்​பிக்க ‘க்ரூ எஸ்​கேப் சிஸ்​டம்’ என்ற பாது​காப்பு அமைப்பை வெற்​றிகர​மாக சோதித்துள் ளோம். உலக அளவில் விண்​வெளிக்கு ராக்​கெட்​களை வணிகப் பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​து​வ​தில் இந்​தியா 2 சதவீத பங்​களிப்பை கொண்​டுள்​ளது. இதை 10 சதவீத​மாக உயர்த்​தும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வருகிறோம். தற்​போது, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்​களை எடுத்து செல்​லும் ராக்​கெட்​களை வெற்​றிகர​மாக அனுப்பி உள்​ளோம். 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக் ​கோளை அனுப்​புவதற்கு தேவையான ராக்​கெட்​டு​களை தயாரிக்க அனு​மதி கிடைத்​துள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.