tamilnadu

img

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்!

சென்னை, நவ. 21 - “ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றி னால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், இந்தப் பல்கலைக்கழகத்தின்வேந்தரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர், இசைத்துறை சாதனையாளர் களான பிரபல பின்னணி பாடகி பத்மபூஷண் பி. சுசிலா, சுந்தரம் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டங் களை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: முதல்வர்களே வேந்தர்களாக இருந்தால்தான், பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும், வளரும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதன்  நோக்கமே சிதைந்துப் போய்விடும் என்று நினைத்து தான், 2013-ம் ஆண்டே, இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர், முதல்வர்தான் என்று அன்று ஆட்சியில் இருந்த  மறைந்த முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக அவரை மனதாரப் பாராட்டலாம். நானும்  மனமுவந்து பாராட்டுகிறேன், இப்போது இருக்கக் கூடிய நிலையை நினைத்து. மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் வகை யில், நீதிபதிகள் அதில் கருத்துகளை கூறியுள்ளனர். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மாநிலப் பட்டி யலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றி னால்தான், அனைவருக்கும் கல்வி, உயர் கல்வி என்ற  இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும். நான் தமிழ கத்துக்காக மட்டும் இதை கூறவில்லை, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துதான் இவ்வாறு கூறுகிறேன். கல்விதான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதுதான், நமது திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.