tamilnadu

குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களிக்க வாக்காளர்களை தூண்டக்கூடாது

சென்னை,பிப்.12- நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் கட்சி சின்னம், அடை யாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அணியக்கூடாது பொதுவாக தேர்தல் பணி யில் வேட்பாளர் சார்பாக செயல் படவும், உதவி புரியவும்  வாக்குச்சாவடி முகவர் வேட்பாள ரால் நியமிக்கப்படுகிறார். அவர் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டம் இருப்பின் வாக்கு ச்சாவடி தலைமை அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆள்மாறாட்டம் செய்வதைத் தவிர்க்க உதவலாம். வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அந்த வாக்குச்சாவடியில் பயன் படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுகள், வாக்குப்பதிவு கருவிகள் மற்றும் தாள் முத்திரைகள் வரிசை  எண்களைக் குறித்துக் கொள்ள லாம். வாக்குப்பதிவு கருவிகள் வாக்கெடுப்புக்காகத் தயார் செய்யப்படும் முன் அவற்றுள் விதிமுறைகளின் கீழ் இருக்க வேண்டிய அடையாள அட்டைத்  துண்டு தவிர, வேறு எதுவும்  இல்லை என்பதைப் பார்வை யிட்டு உறுதி செய்து கொள்ள லாம். வாக்குப்பதிவு கருவிகள் வாக்கெடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பும் வாக்கெடுப்பு முடிந்த  பின்பும் முறையாக முத்திரை  இடப்படுவதை உறுதி செய்து கொள்வதுடன் விரும்பினால் தன்  முத்திரையையும் அதில் பதிக்க லாம். ஒவ்வொரு வாக்காளரும் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்வதோ, மறைமுகமாக அறிய முயற்சிப்பதோ கூடாது. வாக்குச்சாவடி முகவர் வேட் பாளரின் பெயர் மற்றும் அவரது  தேர்தல் சின்னம் அடங்கிய எதை யும் வைத்து கொண்டு வாக்குச் சாவடியினுள் பணியாற்றக் கூடாது. வாக்காளர்களை நேரடியா கவோ, மறைமுகமாகவோ, சைகை மூலமாகவோ அல்லது சங்தேகக் குறிகள் மூலமாகவோ எந்த ஒரு சின்னத்திலும் வாக்க ளிக்கத் தூண்டக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.