தட்டில் போட்ட சாப்பாட்டை சாப் பிட்டு முடித்தவுடன் தட்டை யும் சாப்பிடலாம்! தட்டை சாப்பிட உங்களுக்கு விருப்ப மில்லையா? பரவாயில்லை. அதை உர மாக மாற்றலாம். அதுவும் பிடிக்க வில்லையா? ஒன்றும் மோசமில்லை. பயன்படுத்தி முடித்தபிறகு அலட்சி யமாக வீசியெறிந்தாலும் இது மண் ணிற்கும், மனிதனுக்கும் கஷ்டத்தைக் கொடுப்பதில்லை. கோதுமையின் தவிடை வேக வைத்துப் பக்குவப்படுத்தி தட்டு கள், பாத்திரங்கள் உருவாக்கப்படு கின்றன. கேரளா காக்கநாடு கோகு லம் என்ற பகுதியைச் சேர்ந்த வின யகுமாரும் அவருடைய மனைவி இந்திரா நாயருமே இதன் பின்னணி யில் செயல்படுபவர்கள். பயணத்திற்கு இடையில் ஒரு முறை துபாயில் இருக்கும்போது வினயகுமார் கோது வை தவிடின் அபார பயன்பாட்டை அறிந்தார். இதை கேரளாவிற்குக் கொண்டு வர ஆரம்பத்தில் அவர் முயற்சி செய் தார். ஆனால் போலந்தில் இருந்த கம்பெனி இப்பொருட்களின் உற்பத்தி யை இந்தியாவிற்குக் கொண்டுவர தயாராக இல்லை. இதன் பின்னரே வினயகுமார் தானே சொந்தமாக இதற்காக தொழிற்சாலை ஒன்றை தொடங்கத் திட்டமிட்டார். இதன் பிறகு வந்த நாட்கள் வங்கி ஊழியரான மனைவி இந்திராவிற்கும், மொரீஷியஸில் வேலை பார்த்துவந்த வினயகுமாருக்கும் ஆய்வுக்குரிய நாட்களாயின. வேளாண் பல்கலைக்கழகம், இண்டிகிராம் லேஃஸ், சி எஸ் ஐ ஆர் ஆகியோரின் தொழில்நுட்ப உதவி யுடன் அங்கமாலியில் வினயகுமார் தம்பதிகள் தொழிற்சாலையைத் தொடங்கினர். இப்போது கேரளாவில் 7000 டன் கோதுமையின் தவிடு கிடைக்கிறது. இதில் பாதியை கால்நடைத் தீவனத்திற்காகப் பயன்படுத்தினாலும் மீதி இருப்பதை மறு பயன்பாட்டிற்குக் கொண்டுவரு வது கடினம் என்று இந்திரா கூறு கிறார். ஒரு மில்லில் இருந்து ஒரு கிலோ தவிடு ரூ 40 என்ற விலைக்கு வாங்கி குறைந்தது அதில் இருந்து 1000 பாத்திரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது இரவு உணவிற்கான சாப்பாட்டுத் தட்டு மற்றும் தின் பண்டங்களுக்கான தட்டு உருவாக்கப் படுகிறது. இது தவிர அரிசி மாவில் இருந்து உறிஞ்சுகுழல் (straw), சோளத்தில் இருந்து ஸ்டார்ச் மற்றும் மக்கக்கூடிய பிளாஸ்டிக் ஆகியவை சேர்த்து பைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. விரைவில் ஸ்பூன் மற்றும் முள் தேக்கரண்டியை தயாரிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். சூழல் சீரழிவினால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரிக்கும் இக் காலத்தில் சூழல் காக்க உதவும் இவர் களின் பணி பாராட்டிற்குரியது.