tamilnadu

img

கல்விக்கடன் பெற எளிய வழி...

வங்கிகளுக்குச் சென்று கால்கடுக்க நின்று, வெறுங்கையோடு திரும்பி வந்த நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வங்கிகளோடு இணைந்து, பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகமே கல்விக் கடன் வழஙகுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்துள்ளது.  நாங்கள் வங்கிகளுக்குச் சென்றோம்... எங்களுக்கு சரியான பதில் கிடைக்க வில்லை என்று சொன்னவர்களுக்கு வழிகாட்டு நிகழ்வுகளில் விடை கிடைத்தது.  அவர்களே வருவார்கள் என்று சொன்னது ஆச்சரியத்தை அளித்தது. www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  அதில் என்ன பாடப்  பிரிவில் சேரப்போகி றோம், கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம், விடு திக்கான கட்டணம். படிப்புக்காக வாங்க வேண்டிய பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பட்டியலிட்டு இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் கல்லூரி வழங்கிய சேர்க்கைக்கான கடிதம் ஆகிய இரண்டையும் பதி வேற்றம் செய்ய வேண் டும். கடன் எங்கிருந்து பெற வேண்டும் என்ற வினாவுக்கு ஏதாவது மூன்று வங்கி களை தேர்வு செய்தால், 15 நாட்களுக்குள் வங்கியிலிருந்து தொடர்பு கொண்டு  கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். நான்கு லட்சத்திற்குக் குறைவாகக் கடன் வழங்கினால் எந்தவித உத்தர வாதத்தையும் வங்கிகள் கேட்பதில்லை. அதற்கு மேல் மற்றும் 7.5 லட்சம்  வரையில் பெற்றோர்களிடமிருந்து உத்தரவாதத்தை வங்கிகள் எதிர்பார்க்கின்றன. 7.5 லட்சத்திற்கு மேல் என்றால் ஏதாவது சொத்தை உத்தரவாதமாகக் காட்ட  வேண்டும்.