தமிழகத்தில் விவசாயத்துக்கு மின் வாரியம் இலவசமாக மின்விநியோகம் செய்து வருகிறது. தற்போது 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. தினமும் விவசாயத்துக்கு 18 மணி நேரமும், மற்ற இணைப்புகளுக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம் செய்யப்படுகிறது. மின் கட்டணம் இல்லாததால் அந்த மீட்டரில் மின் பயன்பாட்டை அறிய முடிவதில்லை. மின் பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக அறிவதற்காக, விவசாய மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் துரைமுருகன்
சென்னை: 86 வயதாகும் மூத்த அமைச்சர் துரைமுரு கன், சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இத்தகவலை அறிந்ததும் மருத்துவமனைக்குச் சென்ற முதலமைச்சர், துரைமுருகனிடம் நலம் விசா ரித்தார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
திருச்செந்தூர் பணிகள் நிறைவு
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மெகா திட்ட வளாக பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இதில் எச்.சி.எல். நிறுவனம் பங்களிப்பு ரூ.200 கோடி, இந்து சமய அறநிலையத் துறை ரூ.100 கோடியாகும். முதல் கட்ட பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்த நிலையில், 2 ஆம் கட்ட பணிகளும் நிறைவு பெற்றன. அதனை திங்க ளன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புரிதல் இல்லாதோருக்கு வாய்ப்பில்லை
சென்னை: “மும்மொழி கல்விக் கொள்கை குறித்து புரிதலே இல்லாதவர்கள் தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற் கான வாய்ப்பே இல்லை. இன்றைக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிள்ளைகள் எந்தெந்த இடத்தில் எந்தெந்த உயரத்தில் இருக் கிறார்கள் என தெரிந்து கொண்டு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச வேண்டும்” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரை நீக்க பரிந்துரை
மதுரை: நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கறிஞரை தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சி லில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளதாக பார் கவுன்சில் விளக்கமளித்துள்ளது. பார் கவுன்சிலின் அறிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை முடித்து வைத்தது. இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தார் ஆஷிக் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வானவியல்: தமிழகம்
சிறப்பிடம் சென்னை: சென்னை தரமணியில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் கல்லூரி, பள்ளி ஆசிரியர்களுக் கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆய்வு குறித்த மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் விஞ்ஞான் பிரசார் இயக்குநர் நகுல் பராசர் கூறு கையில், “வானவியல், விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத் தில், இந்தியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. அதுமட்டு மின்றி, வானவியல், விண்வெளி அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடத்துவது பாராட்டத் தக்கது” என்றார்.
வனத்துறைக்கு உத்தரவு!
சென்னை: சிவராத்திரியை ஒட்டி, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தேவையான ஏற்பாடு களை செய்யும்படி வனத்துறைக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்.28 வரை காவல்
இராமேஸ்வரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதி யைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த பிப்.3 அன்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை பிப்.28 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் சேலம் பதிவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காடை யாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.
வெளிச் சந்தைகளில் மின்சாரம்
சென்னை: தமிழகத்தில் கோடைக் கால மின் தேவையை சமாளிக்க வெளிச் சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரி யத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலான மின்சார தேவையை பூர்த்தி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று கடையடைப்பு
காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து பிப்ரவரி 18 அன்று, காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.