திருச்சிராப்பள்ளி, அக்.29 - திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவ நாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாயன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக் கல்லூரி டீன் மரு.குமரவேல் மற்றும் கண்காணிப்பா ளர்கள் உதயஅருணா, அருண்ராஜ் மற்றும் துறைத் தலைவர்கள் வரவேற்ற னர். நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, இதயவியல் பிரிவு, புற்று நோய் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு பிரிவு, பொது மருத்துவப் பிரிவு, பல் மருத்துவப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு என ஒவ்வொரு துறை வாரியாக தற்போதுள்ள வசதி கள், தேவைப்படும் வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மருத்துவ மனையின் பொது உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தத் தேவைப்படுபவை குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளைச் சந்தித்து அவர் களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தரப்பில் இருந்து, ஆண்டுதோறும் இதய நோய்க்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி வரு கிறது. அதனால் இதய அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்கப்பட வேண்டும். அதேபோல, புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் ரேடியேசன் தெரபி மற்றும் ஹீமோ தெரபி சிகிச்சை அளிப்பதற்கும் விரி வான ஏற்பாடு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர். இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி டீன் குமரவேல் தலைமையி லான அரசு மருத்துவர்களிடம் எம்.பி.துரை வைகோ பேசுகையில், “பொது மக்களின் மருத்துவ சிகிச்சையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் மிகச் சிறப்பாகப் பணி யாற்றி வருகிறார். உங்களுக்குத் தேவையான மருத்துவ உள்கட்ட மைப்பு மற்றும் நோயாளிகள் எதிர்பார்ப்பு இவற்றை தெரிவித்தால், அரசுக்கும், மருத்துவமனைக்கும் ஒரு பாலமாக இருந்து திருச்சி அரசு மருத்துவமனை யின் தரத்தை இன்னும் உயர்த்திட முயற்சிப்பேன்” என்றார். இதுதவிர மருத்துவமனையில் நாளுக்கு நாள் வருகைதரும் வெளிநோ யாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியி டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை யும் அரசுக்கு எடுத்துச் செல்வேன் என தெரிவித்தார். ஆய்வின்போது மறுமலர்ச்சி திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் டாக்டர் ரொஹையா, ராசேந்திரன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் மற்றும் கட்சியினர் பங்கேற் றனர்.