பேரவையில் கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்
விரைந்து வந்து நலம் விசாரித்த முதல்வர்!
சென்னை, ஏப்.26 - தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை (ஏப்.26) கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை அமைச்சர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துக் கொண்டிருந்த போது, அமைச்சர் துரைமுருகன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியில் செல்ல முயன்றார். அவர் இரு மேசைகளுக்கு இடையே குறுகலான வழியில் நுழைந்து செல்லும் போது காலை சுமார் 10.28 மணி யளவில் கால் இடறி கீழே விழுந்தார். அதை பார்த்ததும் கட்சி பேதமின்றி உறுப்பினர்கள் அனை வரும் பதறியபடி அவரை நோக்கி சென்றனர். அப்போது பேரவைக்கு வந்துக் கொண்டிருந்த துணை முத லமைச்சர் உதயநிதி, அருகில் இருந்த பேரவைச் செயலாளர் சீனிவாசன், பேரவைத் தலைவரின் உதவியாளர் உள்ளிட் டோர் உடனடியாக துரைமுருகனை கைத்தாங்கலாக பிடித்து வந்து அவரது இருக்கையில் அமர வைத்தனர். குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இந்த தகவல் அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேர வைக்கு விரைந்து வந்து, துரைமுருகனிடம் நலம் விசாரித்தார். இதனால் பேரவை சில நிமிடம் பரபரப்பானது.