தஞ்சாவூர்,மார்ச் 8- தஞ்சாவூர் ஆயுதப்படை காவல் பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் 12 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்ச்சி பெற்றவர் இவர்களுக்கு உரிமம் கிடைத்தது. மகளிர் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவ லகத்தில் நடைபெற்ற விழாவில் இவர்களுக்கு தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ. கயல்விழி ஓட்டுநர் உரிமம் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத் தில் பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவ்விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.