tamilnadu

img

போரூர் – பூந்தமல்லி இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

போரூர் – பூந்தமல்லி இடையே ஓட்டுநர்  இல்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 

வெற்றிகரமாக அமைந்ததாக அதிகாரிகள் பேட்டி

அம்பத்தூர், ஜூன் 6- சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2வது கட்டத்தில் வழித்தடம் 4இல் பூந்த மல்லி - போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட் டத்தை எட்டியுள்ளது.  இந்த வழித்தடத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி முதற்கட்டமாக பூந்தமல்லி யில் இருந்து போரூர் வரை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. தொடர்ந்து இதே வழித்தடத்தில் 2ஆம்  கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், போரூர்- பூந்தமல்லி வழித்தடத்தில், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெள்ளியன்று (ஜூன் 6) வெற்றி கரமாக நடைபெற்றுள்ளது. கடந்த முறை அப் லைனில் (Up line) சோதனை ஓட்டம் நடந்த நிலையில், இந்த முறை  டவுன் லைனில் (Down line) சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த உயர்மட்ட வழித்தடம் போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது மற்றும் பூந்தமல்லி மெட்ரோ  பணிமனையுடன் இணைக்கப்பட்டுள் ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி மெட்ரோ  பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ ரயிலுக்கான சோதனைகளை ஒருங்கி ணைக்கும் மையமாக இருக்கும். கூடுதலாக, பூந்தமல்லி புறவழிச் சாலை நிலையத்தின் துணை மின்நிலை யத்திற்கு, பூந்தமல்லி பணிமனையில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து 33 கேவி மின் விநியோக கேபிள் மூலம் வெற்றிகரமாக மின்சாரம் கொண்டு வர ப்பட்டு, அது செயல்பாட்டிற்கு தயார் செய்யப்பட்டுள்ளது.  நிர்வாக இயக்குநர் பேட்டி  இதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்கு நர் மு.அ.சித்திக் தொடங்கி வைத்தார். பூந்தமல்லி - போரூர் இடையே வரும் டிசம்பர் மாதம் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு வதாகவும், ஒரு மாதத்திற்குள் முழு வேகத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரி வித்துள்ளார். இதில் மெட்ரோ ரயில் நிறுவனத் தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர்  எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலை மைப் பொது மேலாளர்கள் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு),  எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ரேகா  பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடி வமைப்பு), ஆலோசகர் எஸ்.ராமசுப்பு (மெட்ரோ இரயில் இயக்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.