கோவை, மார்ச் 22- கோவை மாநக ராட்சிக்கு பெறப்படும் குடிநீர் ஆதாரமான பில்லூர்-1 மற் றும் 2 ஆவது திட்டத்தில் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பழுது மற்றும் சின் னியம்பாளையம் பகுதி யில் பிரதான குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங் களினால் மணியகராம் பாளையம் 14 நாட்கள், நஞ் சுண்டாபுரம் 13 நாட்கள், டாடாபாத் காந்திபுரம் 12 நாட்கள், சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் 13 நாட்கள், பீளமேடு 13 நாட்கள், காந்தி பார்க் செல்வபுரம் 12 நாட் கள், துடியலூர் 12 நாட்கள், குறிச்சி 11 நாட்கள், டவுன் ஹால் இராமநாதபுரம் 10 நாட்கள், கவுண்டம்பாளை யம் 10 நாட்கள், வடவள்ளி வீர கேரளம் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும். தற்போது பழுதுநீக்கம் செய்யப்பட்டு சீரான குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது என மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித் துள்ளார்.