tamilnadu

img

மதுரை மேற்கு நுழைவாயிலில் டிஆர்இயு ஆர்ப்பாட்டம்....

2019 - 20 ஆம் ஆண்டுக்கான போனசை மத்திய அரசு-ரயில்வே அமைச்சகம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தெட்சிணரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) சார்பில்  மதுரை மேற்கு நுழைவாயிலில் திங்களன்று  உதவிக் கோட்டச் செயலாளர் ப. சரவணன்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை கோட்டச் செயலாளர் ஆர்.சங்கரநாராயணன், ஓப்பன் லைன் பிரிவு செயலாளர் எம். ஜெயராஜ், கோட்டப் பொருளாளர் எம்.சிவக்குமார், துணைப்பொதுச் செயலாளர் ஆர். திருமலை ஐயப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.