விருதுநகர், ஏப்.15- சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமுஎகச சார்பில் மாலை அணிவித்தல், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விருதுநகர் ஒன்றியம், சத்திர ரெட்டியபட்டியில் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்பு, நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் எம்.ஊர் காவலன் தலைமையேற்றார். சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேல், வாலிபர் சங்க மாவட்ட செயலா ளர் எம்.ஜெயபாரத், வழக்கறிஞர் சத்தியராஜ், முன்னணியின் மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.பெருமாள்சாமி, ஏ.எம்.மாரி உள்ளிட் டோர் பங்கேற்றனர். இராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கே அர்ஜுனன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அருப்புக்கோட்டை ஒன்றியம் சார்பில் குருந்தமடத்தில் தீ.ஒ.மு மாவட்ட செய லாளர் எம்.முத்துக்குமார் தலைமையில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.கணேசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாத்தூர் ஒன்றியம், ஸ்ரீரெங்காபுரத்தில் சிபிஎம் மற்றும் சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கம் இணைந்து மாலை அணி வித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜய முருகன், சிஐடியு தலைவர் கே சுப்பாராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.சரோஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருத்தங்கல்லில் தமுஎகச சார்பில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப் பட்டது. தமுஎகச நிர்வாகிகள் ஆசிரியர் கா.சிவபெருமான், முத்துச்சாமி, பெரியநா யகம் ஆகியோர் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என். தேவா, ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.ஆர்.நகரில் முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.சி.பாண்டியன் தலைமையில் சிபிஎம் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு, சிஐடியு தலைவர் கே.ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் உறுதி மொழி ஏற்றனர்.
ஆட்சியரகம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராம சுப்பிரமணியன், திட்ட அலுவலர் திலகவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றி வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி
தேனி அரண்மனை புதூரில் அம்பேத் கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இந்த நிகழ்ச்சி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன் ,சி.முருகன் , தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் இ.தர்மர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் குருசாமி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். தேனி நகராட்சி கம்போஸ்ட் ஓடை தெருவில் நடைபெற்ற விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலை வர்கள் கலந்து கொண்டனர் . பெரியகுளத்தில் அண்ணல் அம்பேத் கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது .நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.இராமச்சந்திரன், சு.வெண் மணி, தாலுகா செயலாளர் எம்.வி .முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்ட னர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கம்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் அண்ணல் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் வீ.மோகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி ஆட்சியர்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அண்ணல் அம்பேத்கர் உருவப் படத்திற்கு ஆட்சியர் க.வீ.முரளீதரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழியை அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்ட னர். மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிர மணியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அழகு நாகேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விமலா ராணி, தாட்கோ மேலாளர் செல்வ ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட னர்.
மதுரை
மதுரை அழகர்கோவில் சாலை ரேஸ்கோர்ஸ் அருகில் உள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு சிபிஎம் மாவட்ட செய லாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ. ரமேஷ், ஜா. நரசிம்மன், ஆர். சசிகலா, பி. எம் அழகர்சாமி, மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் த. செல்லக்கண்ணு, மாவட்ட செயலாளர் ம. பாலசுப்பிரமணியன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மதுரை மண்டல தலைவர் ஜி. மீனாட்சி சுந்தரம், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வா கிகள் பாலசுப்பிரமணியன், புஷ்பராஜ் மற்றும் வாலிபர்,மாணவர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.
திண்டுக்கல்
அம்பேத்கரின் 131வது பிறந்த தினத்தை முன்னிட்;டு திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குழந்தைராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன், திமுக மாமன்ற உறுப்பினர்கள் இந்திராணி, ஆனந்த், அருட்தந்தை பிலிப்சுதாகர், சிபிஎம் நகரச்செயலாளர் அரபுமுகமது, பேரா சிரியை முனைவர் பாலசுந்தரி, தமுஎகச மாவட்டச்செயலாளர் சிவக்குமார், கோபால் (சிஐடியு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்ட நிர்வாகிகள் எம்.ஆர். முத்துச்சாமி, டி.முத்துச்சாமி, கே.அருள் செல்வன், ஆர்.வனஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்டச்செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டார்.