tamilnadu

img

மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்க முடியாது

சென்னை,நவ.9- மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து, உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் மருத்துவர் கள், மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்கள் வெளியிடுவதை முறைப்படுத்தக் கோரி மங்கை யர்கரசி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “மருத்துவர்கள், மருத்து வமனை சார்ந்த விளம்பரங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்து கின்றன. மருத்துவ சிகிச்சைகள் தொ டர்பாக மிகைப்படுத்தப்பட்ட, போலி யான விளம்பரங்களை கொடுத்து மக்களை நம்ப வைக்கப்படுவதாக வும் அதனால், போலி மருத்து வர்கள், போலி மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள், மருத்துவமனைகளை ஊக்கப்படுத் தும் வகையிலான விளம்பரங்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என அந்த மனு வில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி கள், “மருத்துவர்கள், மருத்துவ மனை சார்ந்த ஒவ்வொரு விளம்ப ரங்களையும் ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என எதிர்பார்க்க  முடியாது.  விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ ஆணையம்தான் நட வடிக்கை எடுக்க முடியும். மனுதாரர் இது சம்பந்தமாக மருத்துவ ஆணை யத்திடம் புகார் அளிக்கலாம்.  போலியான மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிட்டால் அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்க லாம் எனவும் தெரிவித்தனர். ஆட்சேபணைக்குரிய விளம்பரங் கள் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டங்கள் இருப்பதால், விளம்பரங் கள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப் படையாக உத்தரவு பிறப்பிக்க முடி யாது என மறுத்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.